காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் ஆலய நித்திய பூசைகள் மாதாந்த உபயகாரர்கள் மூலமாக சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் ஆலய நித்திய பூசைகள் மாதாந்த உபயகாரர்கள் மூலமாக சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
ஆதீனகர்த்தாக்களால் நியமிக்கப்பட்ட செயற்படுத்தும் நிர்வாகிகளால் நித்திய பூசை மற்றும் பராமரிப்பு பணிகள் உரிய வகையில் செயற்படுத்தப்படுகின்றன.
வருடத்தின் 12 மாதங்களிற்கும் 15 க்கும் மேற்பட்ட உபயகாரர்கள் மாதாந்த பூசைகளிற்காக தமது உபயத்தை பதிந்துள்ளார்கள். ஆனாலும் இதுவரை நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிற்கு இன்னமும் உபயம் கிடைக்கவில்லை.
மாதாந்த பூசைகளிற்காக உபயம் பெற்றுக்கொண்டவர்களது பெயர், நட்சத்திரம் என்பவை (மொத்த குடும்ப உறுப்பினர்களினதும் தனித்தனியாக) அம்பாளிற்கு மாதம் முழுவதும் அர்ச்சிக்கப்படும் என்பதோடு மாதந்தோறும் உபயகாரர்கள் வளங்கும் நிதிக்கான வரவும் செலவும் கிரமமாக பேணப்பட்டு வெளியிடப்படும் என்பதனையும் ஆதீனகர்த்தாக்களால் நியமிக்கப்பட்ட நிர்வாகத்தின் சார்பில் திரு.பாலகிருஸ்ணன் சிவறைஞ்சன் அவர்கள் தெரிவித்துக்கொள்கிறார்.
நவம்பர் மற்றும் டிசம்பர் மாத உபயத்திற்கு திரு.பா.சிவறைஞ்சன் அவர்களை தொடர்பு கொள்ளவும்.
+94 77 469 0289, WhatsApp ஊடாகவும் தொடர்பு கொள்ளலாம்.
வைகாசி மாத உபயகாரர்கள் விபரத்துடன் 01.05.2025 துர்க்கை அம்பாளின் காட்சியும் வருமாறு:





Leave a Reply
You must be logged in to post a comment.