நடைபெறவுள்ள பிரதேச சபை தேர்தலில் காரைநகர் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் எனவும், தேர்தல் வாக்குறுதிகளாக எவையெல்லாம் நிறைவேற்றப்படும் என்பதையும் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் உறுதியோடும் தெரிவித்துள்ளார் யாழ் மாநகர சபையின் முன்னாள் மேயரும் சட்டத்தரணியுமான திரு.வி. மணிவண்ணன் அவர்கள்.
அது மட்டுமன்றி தனது அனுபவம் திட்டமிடல் பங்களிப்பு என்பவற்றை நேரடியாக வழங்கி தெரிவு செய்யப்படவுள்ள திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் தலைமையிலான “மான்” சின்ன உறுப்பினர்களுடன் இணைந்து அடுத்து வரும் நான்கு ஆண்டுகளில் காரைநகரை சுபீட்சம் பெறவைப்பேன் எனவும் உறுதிமொழி வழங்கியுள்ளார்.
முழுமையான விபரங்களை பார்வையிட கீழ்வரும் இணைப்பினை அழுத்துக.
காரைநகர் மண்மீதும் மக்கள் மீதும் மிகுந்த மரியாதையும் மதிப்பும் கொண்டுள்ள சட்டத்தரணி திரு.வி.மணிவண்ணன் அவர்களை இன்றைய தேர்தல்கள நிலவரத்திற்காக அன்றி 2022ம் ஆண்டு யாழ் மாநகர சபையின் மேஜராக பணியாற்றிய போது ‘காரைநகர் சேவையாளர்’ கெளரவத்தின் போது பிரதம அதிதியாக வரவேற்று கெளரவம் செய்திருந்தது. ‘எனது ஊர் காரைநகர்’ முற்கூட்டிய நல்லெண்ணத்தின் தீர்க்கதரிசனம்.











