யதார்த்தமாக மக்களுடன் சேர்ந்து பயணிக்க முடியாதவர்கள் வேட்பாளர்களாக!!! உங்கள் வாக்குகளை வீண்டித்துவிடாதீர்கள்.
யதார்த்தமாக மக்களுடன் சேர்ந்து பயணிக்க முடியாதவர்கள், காரைநகர் மக்களுடன் நாளாந்த வாழ்க்கை சூழ்நிலையில், பொதுப்பணியில், பொதுவிடத்தில் காணப்படாமல், தானுண்டு தன்வேலையுண்டு என்று சுயநல நோக்குடன் மட்டும் இதுவரை வாழ்ந்த பலர் பதவி மோகம், தனக்கான அங்கீகாரங்களிற்காகவும், இன்னும் சிலர் வேறு வேலை இன்றியும் பிரதேச சபை உறுப்பினராகி 20,000 ரூபா சம்பளத்திற்காகவும், மேலும் சிலர் தங்களது விசுவாசத்தை தாங்கள் விரும்பும் கட்சிக்கும் கட்சி பிரமுகர்களிற்கும் நிரூபிப்பதற்கு தகுந்த வேட்பாளர்கள் அற்ற நிலையில் வேட்புமனு தாக்கலுக்கு முதல்நாள் வரை தாம் யாரென்று தெரியாத வகையில் மறுநாள் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள்.

பிரதேச சபையின் நடைமுறைகளை தெரிந்து கொண்டும், பிரதேச சபை மூலம் ஊரிற்கான அபிவிருத்திகள் எவற்றை மேம்படுத்த முடியும் எனவும் அறிந்து கொண்டதுடன், கடந்த காலங்களில் பக்கத்து வீடு, அயலட்டைகளுடன் சுமூகமாக பழகி, சிறிய பிரதேசமான காரைநகர் மக்களிற்கு ஏற்கனவே பரீட்சயமானவர்களால் மட்டுமே சமூகம், சமுதாயத்திற்கு கட்டுப்பட்டு ஊரிற்கான பணிகளையாற்ற முடியும். என்பதனை புரிந்து கொண்டு அனுபவமும் ஆற்றலும் ஊரின் கலை கலாசார பண்பாடுகளிற்கு உட்பட்டு, மூத்தோர், ஆசியர்கள், குரு, என்போருடன் மதிப்பளித்து மாண்புடன் பழகுபவர்களிற்கு உங்கள் வோட்டுக்களை வழங்குங்கள்.
முகநூல் பிரசரசாரங்கள் ஊடாக மட்டும் உங்கள் வோட்டுக்களை பெற்றுவிடலாம் என அரசியலுக்கு வந்தவர்களிற்கு எக்காரணம் கொண்டும் உங்கள் வாக்குகளை வீண்டித்துவிடாதீர்கள்.
உங்கள் வோட்டு “மான்” சின்னத்திற்கு வளங்குவதன் ஊடாக காரை மண் தமிழனால், ஊரவனால் ஆழப்படுவதை உறுதி செய்தவர்கள் ஆவீர்கள். காரை மண்ணின் தேவைகளை பூர்ரத்தி செய்ய கொழும்பில் இருந்து கட்டளை தேவையில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

Leave a Reply
You must be logged in to post a comment.