கழுவிற மீனில நழுவுற மீனாக இருக்கும் எழுத்தாளர்கள், காரைநகர் வரலாற்றில் ஈழத்து சிதம்பரம் என போற்றப்படும் திண்ணபுரம் சிவன் கோயிலின் வரலாற்றையும் அதன் முக்கியத்துவத்தையும் அடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்லவதை முயற்சிக்காமல் வெறுமனே காரைநகர் சிவபூமி என்பதை எவ்வாறு நிரூபிக்கப்போகிறார்கள்…?
காரைநகர் ஈழத்து சிதம்பரம் வரலாற்றினை ஆதாரங்களுடன் அடுத்த சந்ததியினருக்கு எடுத்துச்செல்ல 1975 முதல் 2025 வரை கடந்த 50 வருட வரலாற்றை தொகுத்து எழுதுவதற்கு எழுத்தாளர்கள் முன்வந்தால் அதற்கு “எனது ஊர் காரைநகர்” அனுசரணை வழங்கும். அல்லது “எனது ஊர் காரைநகர்” தீசன் திரவியநாதன் எழுத முயற்சித்தால் தகவல்கள், படங்கள், ஆதாரங்கள், ஊசாத்துணை நூல்கள், மற்றும் ஆலோசனைகள், பரிந்துரைகள், அறிவுரைகள் வளங்க எத்தனை நபர்கள் முன்வருவீர்கள்..?
1975ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலத்தில் ஆர்வத்துடனும் அவதானிப்புடனும், சிந்தனை செயற்பாடுகளுடனும் ஈழத்து சிதம்பரத்தின் கடந்த 50 வருட நடைமுறைகளை தெரிந்து கொண்டவர்கள் இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் உண்மைகளையும் சாட்சியங்களையும் பதிவு செய்யும் வகையில் காரைநகர் ஈழத்து சிதம்பரம் திண்ணபுரம் சிவன் கோயிலின் வரலாறு எழுதப்பட வேண்டும்.
திருவாசகத்திற்கு அடியெடுத்துக்கொடுத்த அந்த பரமேஸ்வரன் இன்று மணிவாசகரின் குருபூசை தினமான இன்று 29.06.2025 இல் என்னை இதை பதிய வைத்துள்ளான். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி எங்கள் ஊர் காரைநகர் சிவபூமி என்பதை கடந்த 50 ஆண்டுகள் வரலாற்றின் ஊடாகவே நிரூபித்துக்கொள்ள முடியும்.
ஈழத்து சிதம்பரம் எனப்போற்றப்படும் காரைநகர் திண்ணபுரம் சிவன் கோயில் இல்லாத நிலையில் காரைநகர் சிவபூமியா…!
சிந்திப்போம். செயற்படுவோம்.




