‘வாசிப்பதால் மனிதன் பூரணம் அடைகிறான்’
‘எனது ஊர் காரைநகர்’ சஞ்சிகை 30வது இதழ் கனடாவில் வெளிவந்துள்ளது.
கனடாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட 300 க்கும் மேற்பட்டவர்களிற்கு அஞ்சல் மூலம் முற்றிலும் இலவசமாக அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் இதன் Digital PDF copy இனை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் தங்களது email விலாசத்தினை உள்பெட்டியூடக அனுப்புவதன் ஊடாக பெற்றுக்கொள்ளலாம்.
‘எனது ஊர் காரைநகர்’ சஞ்சிகையினை பெற்றுக்கொள்ள தங்களது முகவரியை தந்து உதவுபவர்கள் மற்றும் இச்சஞ்சிகையினை பெற்றுக்கொள்வதால் உங்களிடம் ஊரிற்கான எந்த தேவைகளிற்காகவும் ‘எனது ஊர் காரைநகர்’ எந்த நிதி சேகரிப்பிலும் ஈடுபட்டதும் இல்லை, ஈடுபடப்போவதும் இல்லை.
இச்சஞ்சிகை முற்றிலும் இலவசம், அஞ்சல் செலவுகள் உட்பட….. 20 வருடங்களாக ‘karainews.com‘, ‘எனது ஊர் காரைநகர்’ சார்பாக எவருக்கும் ஊர் அபிவிருத்தி, ஊரிற்காகவென எந்த நிதி சேகரிப்பிற்காகவும் தனிப்பட்டளவில் தொடர்புகளை ஏற்படுத்தியது இல்லை.
அறிவித்தல்கள் வேண்டுகோள்கள் மட்டுமே தெரியப்படுத்தி வந்துள்ளது. அனுசரணையாளர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் தெரியப்படுத்தப்பட்டு வருகிறார்கள். மனச்சாட்சிக்கு உட்பட்டு சிந்தியுங்கள்.



