Dr.சுவாமிநாதன் அவர்களுடன் மூன்று ஆண்டுகளிற்கு முன்னர் பயிரிக்கூடல் முருகன் ஆலயத்தில் ஆறுதலாக அமைதியாக இருந்து கதைத்த பொழுது அவருடைய மருத்துவம் தவிர்ந்த காரை மக்களிற்கான சேவையினை அறிந்து கொள்ள முடிந்தது.
ஈழத்து சிதம்பரம் வடக்கு வீதியில் அமைந்துள்ள ‘அம்மா மடம்’ என அழைக்கப்படும் சிவாச்சிரமத்தின் நிலை அறிந்து தனது சொந்த செலவில் 40 இலட்சம் ரூபாய்களிற்கு மேற்பட்டளவிலும் மற்றும் ஒரு சிலரின் பொருள் அன்பளிப்புக்களுடன் மீளப்புனரமைப்புச் செய்து கொடுத்துள்ளார். ‘கைராசியான டொக்டர்’ என காரை மக்களின் அன்பை பெற்றுக்கொண்ட வைத்தியர். ‘காரைநகர் சேவையாளர்’ விருது வழங்கி ‘எனது ஊர் காரைநகர்’ கடந்த வருடம் கெளரவம் வழங்கியது.




