07.07.2025 நாளை இந்தியா தமிழ்நாடு திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் நடைபெறவுள்ள 72 குண்டங்கள் அமைக்கப்பட்டு நடைபெறவுள்ள மகாகும்பாபிஷேகத்தினை கண்டு களிக்க சென்றுள்ள நண்பனும் பிரித்தானியா காரை நலன்புரிச் சங்க நிர்வாக உறுப்பினர்களில் ஒருவரும் காரைநகர் திக்கரையை சேர்ந்தவருமான சிவபாதசுந்தரம் அவர்கள் கும்பாபிஷேகத்திற்கு முதல் நாளாகிய 06.07.2025 இன்று யாகபூசைகளை மிகஅருகில் இருந்து தரிசித்ததுடன் வீடியோ பதிவினையும் அனுப்பி வைத்துள்ளார்.
ஆறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடாகவும், சூரபத்மனை வதம் செய்து திருச்செந்தூரில் வந்தமர்ந்து வேண்டியோர்க்கு வேண்டும் வரம் அளித்துவரும் திருச்செந்தூர் முருகன் கும்பாபிஷேகத்தை காண பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் காலை 6.05 மணிக்கு இராஜகோபுர கலசங்களிற்கான கும்பாபிஷேகமும் தொடர்ந்து கருவறை மூலமூர்த்திகளிற்கான கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது.
கோயிலை சூழவுள்ள பகுதிகளில் சனநெரிசலை குறைக்கும் வகையில் ஆங்காங்கே 65 LED மகா பெரும் திரைகளிலும் காண்பிக்கப்படுவதாகவும், இந்திய தொலைக்காட்சிகள் பலவற்றிலும் நேரடி ஒளிபரப்பாக கண்டு களிக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.




