பல்கலைக்கழக உயர்கல்விக்கான உதவி கோரல்..!

பல்கலைக்கழக உயர்கல்விக்கான உதவி கோரல்..!

காரைநகர் வியாவில் ஐயனார் கோயிலடியை சேர்ந்தவரும் மூன்று பிள்ளைகளை உடைய குடும்பத்தின் மூத்த மகளும், யாழ்ற்ரன் கல்லூரியில் க.பொ.த. உயர்தரத்தில் A, 2B பெறுபேறுகளை பெற்றவரும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் Faculty of Technology இல் Bio System Technology பிரிவில் அனுமதி பெற்றுள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் வசதிகளை கொண்ட குடும்பத்தை சேர்ந்த மாணவி ஒருவரிற்கு உடனடியாக கல்விக்கான வசதிகளை வளங்குவதற்கு கருணை உள்ளம் படைத்தவர்களிடம் இருந்து உதவிகள் கோரப்படுகிறது.

தாங்கள் வழங்கும் உதவிகள் நேரடியாக வியாவில் ஐயனார் கோயில் அறங்காவலர் திரு. மகாராணி சோமசேகரம் அவர்கள் ஊடாக வளங்கப்படும்.

கடந்த வருடம் தனது கல்வியை முடித்து வெளியேறிய யாழ் பல்கலைக்கழக மாணவன் ஒருவரிற்கு முந்தைய மூன்று ஆண்டுகளிற்கு வியாவில் ஐயனார் தேவஸ்தானத்தின் ஊடாக அவுஸ்திரேலியாவில் வதியும் மாப்பாணவூரியை சேர்ந்த திரு. ஈஸ்வரபாதம் அவர்களால் வளங்கப்பட்டு வந்ததும், தொடர்ந்து திரு.ஈஸ்வரபாதம் அவர்களால் கடந்த மாதம் முதல் காரை இந்துவில் கல்வி கற்று ஊவா பல்கலைக்கழகத்திற்கு செல்லும் 5 பிள்ளைகளை உடைய வலந்தலையை சேர்ந்த ஒரு மாணவனுக்கு தொடர்ந்து மாதாந்தம் 10,000 ரூபா கடந்த மாதம் முதல் உதவி செய்து வருகின்றார்.

“எனது ஊர் காரைநகர்” ஊடாக மேலும் இருவரிற்கான A/L ரியூசன் வகுப்புகளிற்கான உதவியும் யாழ்ற்ரன் கல்லூரியை சேர்ந்தவரும் தேசிய மட்டத்தில் வெற்றிபெற்ற 8ம் வகுப்பு மாணவி மற்றும் 10ம் வகுப்பிற்கு உட்பட்ட வேறு இரு மாணவர்களிற்கு New Star கல்வி நிலையத்தில் கல்வி கற்பதற்கான உதவிகளும் வளங்கப்பட்டு வரும் நிலையில், தேவையறிந்து மேலும் ஒரு மாணவியின் கல்விக்கான உதவிக்காக கையேந்துகிறது “எனது ஊர் காரைநகர்”.

வியாவிலை சேர்ந்தவரும் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கு அனுமதி பெற்றுள்ள மாணவிக்கான உதவியினை உடனடியாக செய்யவும் அல்லது அந்த மாணவிக்கு குடும்பத்தில் கல்விக்கான வசதியை வளங்கமுடியாத நிலையில் பல்கலைக்கழகம் செல்ல முடியாத நிலையும் ஏற்படும் எனவும் அறியப்படுகிறது.

அரச உதவிகள் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவு மற்றும் பல்கலைக்கழக உதவிகள் கிடைக்கப்பெற்றாலும் மாதாந்தம் தேவையான 50,000 ரூபாய்களில் 50% விகிதமேனும் கிடைக்கப்பெறவில்லையெனவும் மாதாந்தம் 25,000 ரூபாய்கள் வரை நிதி உதவி எதிர்பார்ப்பதாகவும் “எனது ஊர் காரைநகர்” இற்கு தெரிவித்தாலும் எம்மால் தொடர்ச்சியாக உதவும் நோக்கிலும் மேலும் சிலருக்கு உதவிகள் வளங்கப்பட்டு வருவதாலும் மாதாந்தம் 15,000 ரூபாய்கள் வளங்குவதற்கு ஏற்ற வகையில் தங்களிடம் கையேந்துகிறது “எனது ஊர் காரைநகர்”.

முதலாவது மாதத்திற்குரிய நிதியினை “எனது ஊர் காரைநகர்” வழங்கி ஆரம்பித்து வைப்பதுடன்,

ஒரு வருடத்திற்குரிய நிதியான 1,80000(ஒரு இலட்சத்து 80 ஆயிரம்) ரூபாய்கள் மாணவியின் வங்கி கணக்கில் வியாவில் ஐயனார் ஆலய அறங்காவலரினால் வைப்பில் இடப்பட்டு மாதாந்தம் 15,000 ரூபாய்கள் வங்கியினால் விடுவிக்கப்படும் வகையில் வழமைபோல் ஏற்பாடு செய்யப்படும். அத்துடன் இவ்வுதவியினை மனிதாபிமான அடிப்படையில் நிறைவேற்ற உதவி செய்பவர்களிற்கு மாணவியின் முழுமையான விபரங்கள் மற்றும் குடும்ப பின்னணிகள் இப்பகுதி கிராமசேவகர் ஊடாக ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல் வளங்கப்படும்.

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் அன்ன சத்திரம் ஆயிரம் அமைத்தலிலும் மேன்மையானது. “எனது ஊர் காரைநகர்” தொடர்புகளிற்கு Messenger ஊடாகவோ அல்லது 1 416 821 8390 என்ற இலக்கத்தில் WhatsApp ஊடாக தொடர்பு கொள்ளலாம். நன்றி.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

07.07.2025 நாளை இந்தியா தமிழ்நாடு திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் நடைபெறவுள்ள 72 குண்டங்கள் அமைக்கப்பட்டு நடைபெறவுள்ள மகாகும்பாபிஷேகத்தினை கண்டு களிக்க சென்றுள்ள நண்பனும் பிரித்தானியா காரை நலன்புரிச் சங்க நிர்வாக உறுப்பினர்களில் ஒருவரும் காரைநகர் திக்கரையை சேர்ந்தவருமான சிவபாதசுந்தரம் அவர்கள் கும்பாபிஷேகத்திற்கு முதல் நாளாகிய 06.07.2025 இன்று யாகபூசைகளை மிகஅருகில் இருந்து தரிசித்ததுடன் வீடியோ பதிவினையும் அனுப்பி வைத்துள்ளார்.

திருச்செந்தூர் முருகன் கும்பாபிஜேகம் அனைத்து இந்திய தொலைக்காட்சிகளிலும் தற்போது நேரலையாக..!

Leave a Reply