Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

முத்தையாபிள்ளை சுப்பிரமணியம்பிள்ளை (மணியம்) | இறைவனடி 14-07-2025

“எனது ஊர் காரைநகர் ” karainews.com சார்பில் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்து கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாத்தியடையவும் பிரார்த்திப்போமாக!

காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட முத்தையாபிள்ளை சுப்பிரமணியம்பிள்ளை (மணியம்) அவர்கள் 14-07-2025 அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற முத்தையாபிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும் மனோகௌரி அவர்களின் பாசமிகு கணவரும் நீலிப்பந்தனையை சேர்ந்த காலஞ்சென்ற மகேசன் மற்றும் இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும் மேகலா, துவாரகன், சிவனியா ஆகியோரின் அன்புத் தகப்பனாரும் காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை (முன்னைநாள் புகையிரத திணைக்கழம்), தவநிதி, தவமணி ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.

“எனது ஊர் காரைநகர்” karainews.com இன் நீண்டகால அபிமானியும் காரை மண்ணை நேசித்தவருமான அன்னாரின் ஆத்மா தில்லைக்கூத்தனின் திருவடிகளில் சென்றடைய இறைஞ்சுவோமாக. ஓம் சாந்தி.!

தொடர்புகளுக்கு: 1-416-362-8693

Leave a Reply