‘கல்வி கரையில, கற்பவர் நாள் சில’ இடம்பெயர்ந்தாலும் எமது ஊரில் கல்விக்காக ஆக்கபூர்வமாக உதவி வருபவரும், ஏற்கனவே வியாவிலை சேர்ந்த ஒரு மாணவனிற்கு ‘எனது ஊர் காரைநகர்’ மூலம் நான்கு வருட பல்கலைக்கழக கல்விச்செலவிற்கான நிதியுதவி வழங்கி பட்டதாரியாக்கியவரும், தொடர்ந்து இவ்வருடம் முதல் மற்றுமொரு பல்கலைக்கழக வலந்தலையை சேர்ந்த மாணவரிற்கான முழுமையான உதவிகளை வளங்கி ஊக்குவித்து வருபவருமான அவுஸ்திரேலியா சிட்னியில் வசித்து வருபவருமான திரு.ஈஸ்வரபாதம்(ஈசன்) கனடாவிற்கு வருகை தந்திருப்பதும் ஊரையும் உறவையும் ‘எனது ஊர் காரைநகரையும்’ மதிப்பளித்து எனது வீட்டிற்கு வருகை தந்து ஊக்கமளித்திருந்தார்.
“எனது ஊர் காரைநகர்” பார்வையாளர்கள் ஐந்தாயிரம், ஆதரவாளர்கள் ஆயிரம், ஊக்குவிப்போர் ஐநூறு, தொடர்பு கொள்வோர் நூறு, அனுசரணை வளங்குவோர் ஐம்பது.
ஊரிற்காக நேரடியாக உதவும் ஐம்பது பேர்களில் ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக எந்த செய்தி வெளியானாலும் ‘என்ன செய்ய வேண்டும்..?’ என உடனடியாக தொடர்பு கொள்பவர்களில் திரு.ஈசன் அவர்களும் ஒருவர்.
நன்றி ஈசன். ‘எனது ஊர் காரைநகர’ பெருமை கொள்கிறது.
01.09.2025
கல்வி கரையில கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து. – நாலடியார்: 135







