Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திருமதி மனோன்மணி கனகசபை | மறைவு 03.04.2014

திருமதி மனோன்மணி கனகசபை
வாரிவளவு, காரைநகர்
03.04.2014
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், வாரிவளவை வசிப்பிடமாகவும் தற்போது பொன்னம்பலம் வீதி, ஆலடி, காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை மனோன்மணி 03.04.2014 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா கனகசபை (P.H.I)யின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற முத்தையா இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா
சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் செல்வகுமார் (Marine Eng.,U.S.A) கனகமணி, சாரதாமணி(M.A, RDHS office, Vavuniya), சிவகுமார் (Electronical Eng, U.S.A), கலாமணி ஆகியோரின் அன்புத் தாயாரும், நந்தினி (U.S.A), காலஞ்சென்ற இராசரத்தினம், தியாகலிங்கம்(P.H.I, U.C, Vavuniya), பவானி  (U.S.A) , தியாகலிங்கம் (Statistician, Kachcheri, Vavuniya)  ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று இறுதிக் கிரியை சாம்பலோடை
இந்து மயானத்தில் நடைபெற்றது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
மக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்
பொன்னம்பலம் வீதி,
ஆலடி, காரைநகர்.

தொ.பே.இல:- 0094 21 221 1785
0094 77 609 7399

Leave a Reply