Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திரு.நாகலிங்கம் சந்திரலிங்கம் (சந்திரன்) | ஆண்டவன் அடியில்: 18-08-2013

திரு.நாகலிங்கம் சந்திரலிங்கம்(சந்திரன்)
சம்பந்தர்கண்டி காரைநகர் – (ஓமந்தை)

தாயின் மடியில்: 13-01-1944 ஆண்டவன் அடியில்: 18-08-2013
காரைநகர் சம்பந்தர்கண்டியை பிறப்பிடமாகவும் ஓமந்தையை வதிவிடமாகவும் கொண்ட ஓமந்தை
வர்த்தகரும் அகில இலங்கை சமாதான நீதிவானுமாகிய சித்தப்பா அல்லது சந்திரன் என அழைக்கப்படும் சந்திரலிங்கம் 18-08-2013 ல் இறையடி சேர்ந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அமிர்தரத்தினம் தம்பதிகளின் அன்பு புதல்வனும்
காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்
பூமணியின் அன்புக் கணவரும் இளங்குமரனன், இளங்கீரன், இளஞ்செழியன் ஆகியோரின் அன்புத்
தந்தையும் திருமதி இராஜராஜேஸ்வரி பொன்னம்பலம்(கனடா), காலஞ்சென்ற குமாரசாமி,
சுந்தரராஜன்(ஓமான்), குஞ்சிதபாதம்(கனடா), பாலகிருஷ்ணன்(காரைநகர்), காலஞ்சென்ற விஜயலட்சுமி
ஜேக்கப் ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார். அன்னாரின் ஈமக்கிரியைகள் செவ்வாய்க்கிழமை
மாலை ஓமந்தையிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று ஓமந்தை மயானத்தில் தகனம்
செய்யப்படும். இவ் அறிவித்தலை உறவினர்களும் நண்பர்களும் தயவு செய்து ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குஞ்சிதபாதம்(சகோதரன்)

மார்க்கம்,

கனடா 905-201 0305

Leave a Reply