Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

நல்லதம்பி சிவசுப்பிரமணியம் | சிவபதம் 09.09.2012

நல்லதம்பி சிவசுப்பிரமணியம்
பயிரிக்கூடல், காரைநகர்

காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி சிவசுப்பிரமணியம் (செட்டிமணியம்) நேற்று (09.09.2012) ஞாயிற்றுக்கிழமை சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லதம்பி-சின்னாச்சிப்பிள்ளை(தபால் திணைக்களம், மலேசியா), தம்பதியரின் அன்பு மகனும்
காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை-அன்னம்மா (ஆசிரியர், வைத்தியர்) தம்பதியரின் மருமகனும், காலஞ்சென்ற
பாலசௌந்தரியின் அன்புக்கணவரும், அருட்குமரன் (லண்டன்), அருட்செல்வி(ஆசிரியை, வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை),
அருட்சோதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், சந்திராதேவி (லண்டன்), யோகேஸ்வரன்(மொபிற்றல் டீலேஸ், யாழ்ப்பாணம்),
கிருஸ்ணதாஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனும் சந்தோஷ், சருஷ்ன், மயூரி (லண்டன்) கிசால்வன், தேசிகன், சுஜீவன்,
கார்த்திகன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புப்பேரனும், காலஞ்சென்ற சுப்பிரமணியத்தின் சகோதரனும், ஞானாம்பிகை, காலஞ்சென்ற
புவனேஸ்வரி மற்றும் பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான விஸ்வேஸ்வரன்(நீர்ப்பாசனத் திணைக்களம்), மகேஸ்வரி மற்றும்
அம்பிகைபாகன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (11.09.2012) செவ்வாய் காலை 9.00மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல்
சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

பயிரிக்கூடல், தகவல்:
காரைநகர். பிள்ளைகள்,மருமக்கள்
தொ.பே.இல: 0718728869

Leave a Reply