Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திருமதி நமசிவாயம் அன்னம்மா | இறைவன் அடியில்: 08.11.2014

திருமதி நமசிவாயம் அன்னம்மா
கோவளம், காரைநகர்

அன்னை மடியில்: 23.05.1933
இறைவன் அடியில்: 08.11.2014
காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி நமசிவாயம் அன்னம்மா அவர்கள் 08.11.2014 அன்று காரைநகரில் காலாமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நாகமுத்து-பார்வதி தம்பதியின் அன்பு மகளும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை நமசிவாயத்தின் அன்பு மனைவியும் அருளானந்தம்,
சேனாதிராசா, காலஞ்சென்ற செராசிங்கம் அவர்களின் அன்பு சகோதரியும், ஏகாம்பரநாதன், விமாலாதேவி, ரதிதேவி, தவமலர்(தவம்), காலஞ்சென்ற சிவராசா,
சாந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும், சோதிமலர், சுப்பிரமணியம், குகதாஸ், குமாரரத்தினம், திருநீலகண்டசிவம் ஆகியோரின் அன்பு மாமியாரும், மாலதி, மதனகுமார், பாலகுமார், பகீரதி ஆகியோரின் அன்பு பேத்தியும், யதுசனா, விதுசனா ஆகியோரின் பூட்டியுமாவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் 09.11.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மகள்(கனடா)
குமாரரத்தினம் தவமலர் – 416 757 4828
குகதாசன் ரதிதேவி – 647 926 3785

Leave a Reply