Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

பொன்னம்பலம் பாலசிங்கம் |மறைவு: 28.12.2012

திரு.பொன்னம்பலம் பாலசிங்கம்
இடைப்பிட்டி, காரைநகர்
(இளைப்பாறிற உதவி அரசாங்க அதிபர், நெடுந்தீவு)
மறைவு: 28.12.2012
காரைநகர் விளானையைப் பிறப்பிடமாகவும், இடைப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.பொன்னம்பலம் பாலசிங்கம் அவர்கள் 28.12.2012 வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற அம்பலவாணர் பொன்னம்பலம் பார்வதிப்பிள்ளை தம்பதியரின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்;சென்ற சங்கரப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதியரின் அருமை மருமகனும்,
சிவபாக்கியத்தின் அன்புக்கணவரும் ஆவார். அன்னார் ஞானாம்பிகை, கமலாம்பிகை(உப-அதிபர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்), கனகாம்பிகை(பிரான்ஸ்), சவுந்தராம்பிகை(ஜேர்மனி), தனலட்சுமி, மோகனாம்பாள்(கனடா), நேசமலர்(பிரான்ஸ்), ஆகியோரின் அருமைத்தந்தையும், சிவசோதி(யாழ்ப்பாணம்), லிங்கேஸ்வரன்(ஆசிரியர் கலாநிதி ஆ.தியாகராஜா ம.ம.வித்தியாலயம்), கெங்காதரன்(பிரான்ஸ்), விஜயசிங்கம்(ஜேர்மனி), சிவானந்தன்(கொழும்பு), உருத்திரலிங்கம்(கனடா), அருள்நாதன்(பிரான்ஸ்), ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அருட்குமரன்(பான் ஏசியா வங்கி, யாழ்ப்பாணம்), ஜனனி(இலங்கை வங்கி,யாழ்ப்பாணம்), ரமேஸ், சிவப்பிரியன், அபிராமி, சதீஸ், தினேஸ், கீதவேணி, கஜனி, ஜீவினி, பிரதாப், வனிதா,தனுஷன், மயூரன், மயூரி, கஜன் ஆகியோரின் அன்புப் பேரனும், திருவாதிரை(ஓய்வுபெற்ற தபாலதிபர்) மற்றும் காலஞ்சென்ற ஈஸ்வரி, வள்ளியம்மை ஆகியோரின் சகோதரரும், லோகேஸ்வரி(ஓய்வுபெற்ற தாதிய உத்தியோகத்தர்), காலஞ்சென்ற
பாலசுப்பிரமணியம், சுந்தரமூர்த்தி, சிவகலை, சிவப்பிரகாசம் மற்றும் ஒப்பிலாமணி, சிவமணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30.12.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சாம்பலோடை மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
இடைப்பிட்;டி, காரைநகர்

Leave a Reply