சுந்தரமூர்த்தி சத்தியமூர்த்தி | மறைவு 20.08.2012
சுந்தரமூர்த்தி சத்தியமூர்த்தி
(மக்கள் வங்கி முகாமையாளர்)
பத்தர்கேணி, காரைநகர்
மரண அறிவித்தல்
காரைநகர் பத்தர்கேணியைப் பிறப்பிடமாகவும் 34/17 வளாக வீதி, திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட
சுந்தரமூர்த்தி சத்தியமூர்த்தி(மக்கள் வங்கி முகாமையாளர்) 20.08.2012 திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி அன்னபூரணம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும் காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி மற்றும் சிவகாமசுந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும் சிவராஜேஸ்வரி (நந்தினி)யின் அன்புக்கணவரும், சத்தியகீர்த்தியின் அன்புத் தந்தையும், முருகமூர்த்தியின் அன்புச் சகோதரனும், சிவானந்தராசா, சிலோசனா, மனோகரி, சத்திகலா, சிவசித்து ஆகியோரின் மைத்துனரும், தர்ஷனா, கிருஷன், ஆகாஷ், அபிலாஷ் ஆகியோரின் பெரியதந்தையும், திஷானி, அரவிந்த் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 21.08.2012 செவ்வாய்கிழமை காலை 9.00 மணிக்கு அவரது யாழ் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக கோம்பையன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
34/17 வளாக வீதி, திருநெல்வேலி
தொலைபேசி: 021 222 9594


Leave a Reply
You must be logged in to post a comment.