Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திருமதி சுப்பிரமணியம் பாறுவதி(தேவி) | இறைவனடி 03.09.2012

திருமதி சுப்பிரமணியம் பாறுவதி(தேவி)
வேதரடைப்பு, காரைநகர்

காரைநகர் அல்லின்வீதி வேதரைப்பைப் பிறப்பிடமாகவும் தற்போது தெகிவளையில் வசித்தவருமான திருமதி பாறுவதி
சுப்பிரமணியம் அவர்கள் 03.09.2012 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கதிரவேலு சுந்தரம் தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற கந்தப்பு சிவகாமிப்பிள்ளை(மொந்திபுலம்) தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற கந்தப்பு சுப்பிரமணியம் அவர்களின் அன்பு
மனைவியும், சதாசிவத்தின்(ஓய்வுபெற்ற தொழில்நுட்ப அதிகாரி, காகிதஆலை, வாழைச்சேனை) அன்புத் தாயாரும், தயாநிதியின் மாமியாரும், காலஞ்;சென்ற பாக்கியம் மற்றும் விசாலாட்சி(வட்டக்கச்சி), தியாராஜா(உரிமையாளர் ஓட்டோ
அச்சகம், கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும் னுச.ராஜீவ்(கொழும்பு தேசிய வைத்தியசாலை), ரகுநாதன்(பொறியியலாளர். வீதி அபிவிருத்தித் திணைக்களம், வடமாகாணம்), ராகுலன்(பொறியியலாளர், சிங்கப்பூர்),
துஷ்யந்தி, அஜந்தா(பிரதேச செயலகம், நல்லூர்), தயோமி, ஆகியோரின் பேத்தியும், அபிநயன், ஆர்த்திகா, கௌதம், பிரிதீக் ஆகியோரின் அன்புப் பூட்டியமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 05.09.2012 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில்
நடைபெற்று தகனக்கிரியைகள் கல்கிசை பொது மயானத்தில் நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள்
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: 3ஃ10 பின்வத்த வீதி
ளு.சதாசிவம்(மகன்) தெகிவளை

Leave a Reply