Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திரு.சண்முகம் திருநாவுக்கரசு(ஓவசியர்) |மறைவு: 06.12.2012

திரு.சண்முகம் திருநாவுக்கரசு(ஓவசியர்)
கோவளம், காரைநகர்
(கனடா)

தோற்றம்: 18.08.1936
மறைவு: 06.12.2012
காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும் கனடா ஸ்காபுரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சண்முகம் திருநாவுக்கரசு(ஓவசியர் V.C) 06.12.2012 வியாழக்கிழமை கனடாவில் சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சண்முகம் சிவகாமி தம்பதியினரின் ஏகபுத்திரனும் காலஞ்சென்ற தம்பிஐயா, ஆச்சிமுத்து தம்பதியினரின் மருமகனும், காலஞ்;சென்ற இராஜேஸ்வரியின்(இராசு) அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கனகரத்தினம் மற்றும் நாகம்மா ஆகியோரின் சம்பந்தியும் சிவகுமாரின் பாசமிகு தந்தையும், ரோகிணியின் அன்பு மாமனாரும், அபிலாஷ், அஜீஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும், புவனேஸ்வரி(வேவி), திரிபுரகல்யாண- சுந்தரி(பவா), காலஞ்சென்ற கனகசுந்தரம் மற்றும் விஜயலட்சுமி(விசிஜம்), சிவசோதி(இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் சனிக்கிழமை 08.12.2012 மாலை 4-8 மணி வரை 4164 Sheppard Ave( at Midland Ave)  இல் அமைந்துள்ள Ogden Funeral Home இல் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் மறுநாள் காலை ஞாயிற்றுக்கிழமை 09.12.2012 காலை 9-11 வரை அதே இடத்தில் ஈமக்கிரியைகள் நடைபெற்று பகல் 12.00 மணிக்கு 256 Kingston Road / Woodbine Ave இல்
அமைந்துள்ள St.John Norway Cemeterys Cremotorium த்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்:

மகன், மருமகள், பேரப்பிள்ளைகள்
தொலைபேசி: 416 473 8619 அல்லது 416 267 3736

Leave a Reply