பாலஸ்தாபனம் செய்யப்பட்ட கோயில்களில் மகோற்சவங்கள் போன்று மேளதாளங்கள், சுவாமிகளிற்கு இராஜ உபசாரங்கள், சாத்துப்படிகள் செய்வது சைவாகமத்திற்கு உட்பட்டதல்ல. படிக்கட்டு அபிஷேகம் தவிர்ந்து மற்றைய அபிஷேகங்கள் செய்வதானது சைவ சமய ஆகமங்களிற்கு அப்பாற்பட்டது என இந்தியா சிதம்பரம் தில்லைவாழ் தீட்சதர்கள் இன்றும் தெரிவித்தார்கள்.

மக்களை மடையர்களாக்கி மூன்றாண்டுகளாக பாலாலயத்தில் சுவாமிகளை முடக்கி திருப்பணி என்னும் பெயரில் திருவிழாக்கால நாட்களில் தடவிக்கொண்டிருக்கும் வேலைகளைக்காட்டி கோர்ட் கேசுகளிற்கு பணம் சேர்க்கும் நடவடிக்கையும், கோயில்களிற்கு அள்ளி வழங்கி கும்பாபிஷேகத்திற்கு திட்டமிட்டு திருப்பணிகளை நிறைவு செய்யக்கூடிய செயற்திறனும் கொடைத்திறனும் மிக்கவர்களை வெளியேற்றிய மாபாதகர்கள் சைவ ஆகம்ப்படி வழிநடாத்தப்பட்டு வந்த ஈழத்து சிதம்பரத்தை தனது சொந்த தேவைகளிற்காக பரமேஸ்வரன் கூத்துக்கொட்டகையாக்கி பாலஸ்தாபனம் செய்யப்பட்ட கோயிலில் திருவிழா நடாத்தி சைவ ஆகமங்களை கேலிக்கூத்தாக்கிக்கொண்டிருக்கின்றார் என்பதும் அதனை இன்னமும் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கும் மக்கள் பயத்தினால் ஐம்புலன்களையும் அடக்கிக்கொண்டு பாவங்களிற்கு துணை போனவர்களாகின்றனர்.
சிதம்பரம் தில்லையில் வாழும் தீட்சதர்கள் பலரிடம் இன்றைய ஈழத்து சிதம்பரத்தின் சில வீடியோ பதிவுகளை நேரடியாக காட்டினேன், ‘எந்த மடையர்கள் இதனை செய்வதாக கேட்டார்கள்’ ஏன் இப்படி நடக்கிறது..? ஆகமங்களை குலைத்து மதம் மாற்றவா முயற்சிக்கிறார்கள் இவர்கள் என கேட்கிறார்கள்…?
அதுவும் சிவன் கோயிலில் இவ்வாறு நடப்பதற்கு ஊரவர்கள் விட்டு விட்டார்களா என்றும் கேட்கிறார்கள்…?
‘யாரொடு நோவோம் யார்க்கெடுத்துரைப்போம்… ஆண்டவா… ஆண்டவன் நின் அருள் இல்லையானால்…’
தில்லை சிதம்பரத்திலிருந்து…
தீசன் திரவியநாதன்.
28.03.2026



