‘எனது ஊர் காரைநகர்” ஊடாக காரைநகர் முன்பள்ளி மாணவர்களிற்கு போஷாக்கு உணவு மற்றும் கற்றலுக்கான உதவிகள் வழங்கப்படுகின்றன! |25.Jul.2022

கேளுக்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்!
கேட்டோம் தந்தார்கள் தட்டினோம் திறந்தார்கள்..!
‘எனது ஊர் காரைநகர்” ஊடாக காரைநகர் முன்பள்ளி மாணவர்களிற்கு போஷாக்கு உணவு மற்றும் கற்றலுக்கான உதவிகள் வழங்கப்படுகின்றன!

னது ஊர் காரைநகர்” இணையத்தளம் ஊடாக கடந்த மாதம் வெளிக்கொணரப்பட்ட கற்றலுக்கான உதவியினை வழங்க கனடாவில் இருந்தும் அவுஸ்திரேலியாவில் இருந்தும் மலேசியாவில் இருந்தும் காரை அன்பர்கள் முன்வந்துள்ளனர்.


வியாவிலை சேர்ந்த மாணவன் ஒருவரிற்கும், பெரியமணலை சேர்ந்த மாணவன் ஒருவருக்கும் பல்கலைக்கழக மேற்படிப்புக்கான உதவி தேவைப்படுவதாகவும் அவர்களது நிலமைகளை நேரடியாக சென்று கண்டுகொள்ளும்படியும் கடந்த சில மாதங்களிற்கு முன்னர் காரைநகரிற்கு சென்ற போது ஓய்வு பெற்ற முன்னாள் கல்விப்பணிப்பாளர் திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களும் வியாவில் ஐயனால் கோயில் அறங்காவலர் திரு.மகாராணி சோமசேகரம் அவர்களும் கேட்டுக்கொண்டனர். மேற்படி மாணவர்களின் நிலமையினை நேரடியாக சென்று கேட்டு அறிந்து கொண்டதுடன் அன்றைய தினமே முதற்கட்டமாக ‘எனது ஊர் காரைநகர்” ஊடாக முதல் மூன்று மாதங்களிற்கான உதவிகள் வழங்கப்பட்டன.


தொடர்ந்து மேலும் ஒரு வருட காலத்திற்கு மேற்படி இரு மாணவர்களிற்கும் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கற்றலுக்கான செலவாக ஒரு மாணவனுக்கு ஒரு இலட்சத்து இருபது ஆயிரம் ரூபாய்களும் மற்றைய மாணவனுக்கு ஒரு இலட்சம் ரூபாய்களும் வழங்க கனடாவில் வாழும் சம்பந்தர்கண்டியை சேர்ந்த அன்பர் ஒருவரும் அவுஸ்திரேலியா சிட்னியில் வசிக்கும் மாப்பாணவூரியை சேர்ந்த அன்பர் ஒருவரும் முன்வந்துள்ளதையடுத்து இந்த ஆண்டு 2022 யூலை மாதம் முதல் அடுத்த வருடம் யூலை மாதம் வரைக்குமான நிதியுதவி வியாவில் ஐயனார் கோயில் அறங்காவலர் திரு.மகாராணி சோமசேகரம் அவர்கள் ஊடாக வங்கி மூலம் தடையின்றி வழங்க யூலை மாதம் முதல் வைப்பில் வைப்பில் இடப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு மாணவர்களிற்கும் தொடர்ந்து அவர்களின் கற்றல் செயற்பாடுகளை அறிந்து பல்கலைக்கழக கற்றல் முடியும் வரை இந்த நிதி உதவியை வழங்க அவுஸ்திரேலியாவில் வாழும் மாப்பாணவூரியை சேர்ந்த அன்பர் முன்வந்துள்ளார் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.


அதுமட்டுமல்லாது “எனது ஊர் காரைநகர்” ஊடாக தற்போதைய நாட்டு நிலமைகளை கருத்தில்கொண்டு அரசினால் வழங்கப்பட்டு வந்த முன்பள்ளி சிறார்களிற்கான போஷாக்குணவு இடைநிறுத்தப்பட்டுளதால் பெரியமணலில் அமைந்துள்ள சிவகௌரி முன்பள்ளியில் கல்வி பயிலும் 28 சிறார்களிற்கு தொடர்ந்தும் இடைவிடாது போஷாக்குணவு வழங்க “எனது ஊர் காரைநகர்” ஊடாக மலேசியா வாழ் காரை உறவான சரஸ்வதி அம்மா அவர்கள் முன்வந்துள்ளார். அடுத்து வரும் இரண்டு(ஆகஸ்ட், செப்டெம்பர்) மாதங்களிற்கு போஷாக்குணவு வழங்க முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளார்.
ஏற்கெனவே அரசினால் வழங்கப்படும் போஷாக்கு உணவுக்கு போதியளவு நிதி உதவி கிடைக்கப்பெறாத வகையில் “எனது ஊர் காரைநகர்” ஊடாக இந்த ஆண்டுக்கு மேலதிகமாக 65,000 ரூபா சமையல் உதவியாளர் தொகை உட்பட வழங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து வரும் இரண்டு மாதங்களிற்கு முழுமையான அனுசரணை வழங்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.


மேலும் காரைநகரில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களை கொண்டுள்ள பிரதேச முன்பள்ளிகளில் கல்வி பயிலும் சிறார்கள் பலர் கல்வியோடு ஒருவேளை போஷாக்கு உணவினை பெற்றுக்கொள்ளவே முன்பள்ளிகளிற்கு சென்று வருகின்றார்கள் எனவும், நாட்டு நிலமையை கருத்தில் கொண்டு அரசினால் வழங்கப்பட்ட உதவிகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் மற்றைய சில பிரதேசங்களில் உள்ள முன்பள்ளிகளிற்கும் போஷாக்கு உணவிற்கான நிதியுதவியினை தீவகவலய முன்பள்ளி உதவி இணைப்பாளரினால் உதவிகள் கோரப்பட்டுள்ளன. ஊர் மன்றங்களோ அன்றி தனிப்பட்டவர்களோ மாதம் ஒன்றிற்கு 20 நாட்கள் ஒரு முன்பள்ளிக்கு போஷாக்குணவு வழங்க 50,000 ரூபாவிற்கு உட்பட்டளவிலான செலவுகளே உள்ளன என்றும் அவற்றினை வழங்க முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.


காரைநகரில் ஒரு சில பிரதேசங்களில் உள்ள முன்பள்ளி சிறார்களிற்கு போஷாக்கு உணவு வழங்கப்படுவது காலத்தின் கட்டாயமாக கருதப்படுகின்றது. முன்பள்ளி சிறார்களிற்கு மாதம் ஒன்றிற்கு போஷாக்கு உணவு வழங்க முன்வருபவர்கள் “எனது ஊர் காநைரகர்” இணையத்தளத்தினை தொடர்பு கொள்வதன் மூலம் முன்பள்ளிகளின் தொடர்பும் விபரமும் பெற்றுத்தரப்படும் என்பதுடன் நேரடியாக தங்களது உதவிகள் முன்பள்ளிகளை சென்றடையவும் உத்தரவாதம் அளிக்கப்படும்.

More From Author

12 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் க்ளிக் செய்து வாசித்திருக்கிறார்கள். 20 வருடமாக நான் என்ன சொல்கிறேன் என்பதையும் அதை எத்தனை ஊரவர்கள் பார்க்கிறார்கள், செவிமடுக்கிறார்கள் என்பதை நன்கு நான் அறிவேன். அதனால் தான் 20 வருடம் சளைக்காமல், பயப்படாமல், உண்மையை உரத்து சொல்கிறேன்.

காரைநகர் மாணவர்களிற்கு கல்வி கற்றலுக்கான உதவி! | 07.Jul.2022

காரைநகர் இந்துக் கல்லூரி தெற்கு வளாக வகுப்பறை கட்டிடம் Condemned! |Aug.2022

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Recent Posts

Archive

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Recent Comments

No comments to show.