நீலங்காடு கடற்றொழிலாளர் சங்கத்தினருக்கு சுழற்சி முறையில் கடனடிப்படையில் கட்டுமரம் வேண்டுவதற்காக கோரப்பட்ட 20 இலட்சம்

15.05.2024 அன்று நீலங்காடு கடற்றொழிலாளர் சங்கத்திற்கு ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக திரு.க.உமைபாகன் அவர்களால் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் மூலம் பயனடைந்த பயனாளிகள் விபரம் மற்றும் நன்றியறிதல் கடிதம் மேற்படி சங்கத்தினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்ட வாக்கிற்கு அமைய நீலங்காடு கடற்றொழிலாளர் சங்கத்தினருக்கு சுழற்சி முறையில் கடனடிப்படையில் கட்டுமரம் வேண்டுவதற்காக கோரப்பட்ட 20 இலட்சம் ரூபாயின் ஒரு பகுதியாக ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக ஜனவரி மாதம் 2 இலட்சமும் கடந்த மாதம் 10 இலட்சமும், மொத்தம் 12 இலட்சம் ரூபாய்கள் வழங்கப்பட்டது.

26.02.2024 அன்று நீலங்காடு கடற்றொழிலாளர் சங்கத்திற்கு ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக வழங்கப்பட்ட 2 இலட்சம் ரூபாய்களை வழங்கிய அன்பர்கள் பெயர் விபரம் வருமாறு:

1. க. உமைபாகன்(கனடா) – 50,000

2. தி.தவச்செல்வன்(அமெரிக்கா) – 50,000

3. குயின்ரினா அருமைத்துரை(கனடா) – 12,000

4. சிவரூபன் கோமதி(வவுனியா) – 25,000

5. பா.சோமசுந்தரம் (கிளிநொச்சி) – 10,000

6. தீசன் திரவியநாதன் – 53,000

26.02.2024 வழங்கப்பட்ட மொத்தம்: 200,000 ரூபா.

ஜனவரியில் வழங்கப்பட்ட இரண்டு இலட்சம் ரூபாய்கள் ஊடாக ஐந்து பயனாளிகளும் கடந்த மே மாதம் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் மூலம் 10 பயனாளிகளும் பயனடைந்துள்ளனர். மேற்படி வழங்கப்பட்ட நிதியினை மாதாந்தம் மீண்டும் சங்கத்திற்கு வட்டியின்றி மீள செலுத்துவார்கள் என்பதுடன் மீண்டும் பெறப்படும் மாதாந்த தவணை பணத்தின் ஊடாக மேலும் பயனாளிகளிற்கு மீண்டும் அந்நிதி வழங்கப்பட்டு சுழற்சி முறையில் மேலும் பல பயனாளிகள் எதிர்வரும் காலங்களில் பயனடைவார்கள்.

இதனை மேற்பார்வை செய்ய காரைநகர் பிரதேச சபை செயலரின் மேற்பார்வையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் யாழ் கூட்டுறவு அபிவிருத்தி சமாஜமும் நீலங்காடு கடற்றொழிலாளர் சங்கத்தின் மாதாந்த கணக்கறிக்கைகளை பார்வையிட்டு உறுதிப்படுத்திற்கொள்ளவும் ஆவண செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடந்த வருடம் அக்டோபர் மாதம் திரு.சுப்பிரமணியம் குருபரன் ஊடாக ‘எனது ஊர் காரைநகர்’ மூலமாக கோரப்பட்ட 20 இலட்சம் ரூபாய்கள் கட்டுமரம் வேண்டுவதற்கு கோரப்பட்ட போதிலும் அதில் ஒரு பகுதியை கனடா காரை கலாசார மன்றத்தின் திரு.சிவசம்பு சிவநாதன் தலைமையிலான நிர்வாக சபை வழங்க முன்வந்து 5 இலட்சம் ரூபாய்களை 26.04.2024 கடந்த ஏப்ரல் மாதம் நிர்வாகத்தை கையளிப்பதற்கு முன்னர் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டு அதற்குரிய விபரங்களும் வழங்கப்பட்டுள்ள போதிலும் காரைநகர் அபிவிருத்தி சபை அந்த நிதியினை இன்னமும் நீலங்காடு கடற்றொழிலாளர் சங்கத்தினரிடம் வழங்க மறுத்து வருவதுடன் நீலங்காடு கடற்றொழிலாளர் சங்கத்தின் சார்பில் இது தொடர்பாக காரைநகர் பிரதேச செயலரிடம் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

கனடா காரை கலாசார மன்றத்தின் திரு.சிவசம்பு சிவநாதன் தலைமையிலான நிர்வாகத்தினரால் தீர்மானிக்கப்பட்டு அப்போதைய நிர்வாக சபையின் நிதியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட மேற்படி நிதியினை காரைநகர் அபிவிருத்தி சபை இன்னமும் உரிய முறையில் நீலங்காடு கடற்றொழிலாளர் சங்கத்தினரிடம் கையளிக்க முடியாத நிலமையானது மேற்கொண்டு கனடா காரை கலாசார மன்றத்திற்கும் காரைநகர் அபிவிருத்தி சபைக்குமான உறவினை பாதிப்படைய வைக்கலாம் என்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

28.04.2024 அன்று கனடா காரை கலாசார மன்றத்தின் திரு.சிவசம்பு சிவநாதன் தலைமையிலான நிர்வாக சபை தமது நிர்வாகத்தை பொதுச்சபையில் கையளிப்பதற்கு முன்னர் நிர்வாக சபையினால் தீர்மானிக்கப்பட்ட செயற்பாடுகளிற்காக மொத்தம் 10 இலட்சம் ரூபாய்களை அனுப்பி வைத்திருந்தது. பாடசாலை பிள்ளைகளிற்கான கற்றல் உதவிக்கான மாதாந்த நிதியுதவி, கலாநிதி விளையாட்டுக்கழகத்தின் வேண்டுகோளை ஏற்று அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு ஒரு இலட்சம் ரூபாய்கள், மற்றும் நீலங்காடு கடற்றொழிலாளர் சங்கத்தினருக்கான 5 இலட்சம் ரூபாய்கள் என்பன இன்னமும் காரைநகர் அபிவிருத்தி சபையின் திரு.வி.ஹம்சன் தலைமையிலான நிர்வாகத்தினரால் நம்பிக்கைக்கு பொறுப்பாக நடந்து கொண்டு கனடா காரை கலாசார மன்றத்தினால் வழங்கப்பட்ட நிதியினை உரிய முறையில் பயனாளிகளிடம் வழங்க முடியாத நிலை விமர்சனத்திற்கு உரியது மட்டுமன்றி நம்பிக்கைத் தன்மைக்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இரண்டு சபைகளிற்கும் இடையேயான உறவை பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.

‘எனது ஊர் காரைநகர்” ஊடாக வழங்கப்பட்ட 12 இலட்சம் ரூபாய்களை பெற்று உரிய முறையில் பயனாளிகளிடம் வழங்கியதுடன் உரிய முறையில் அதற்குரிய ஆவணங்களையும் நன்றியறிதலையும் பொதுப்பணியில் ஈடுபடும் மக்கள் அனைவரும் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக தெரிவித்து பொதுப்பணியில் ஈடுபடும் மக்களின் நன்மதிப்பை பெற்றுக்கொள்வதோடு மேலும் தொடர்ந்து உதவிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் செயற்பட்டு வருவதையிட்டும் நீலங்காடு கடற்றொழிலாளர் சங்கத்திற்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றது ‘எனது ஊர் காரைநகர்” சார்பில் தீசன் திரவியநாதன்.

More From Author

2017.10.20 அன்று ஈழத்து சிதம்பரத்தில்

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி மாணவிக்கு குவியும் பாராட்டுகளும் கல்வி மற்றும் விளையாட்டு துறையில் ஊக்குவிக்க ‘எனது ஊர் காரைநகர்’ ஊடான மாதாந்த ஊக்குவிப்பு நிதியும்.

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: karainewstheesan@gmail.com / theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Recent Posts

Archive

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Recent Comments

No comments to show.