Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

வேலுப்பிள்ளை அமிர்தலிங்கம் | மறைவு 27.01.2012

வேலுப்பிள்ளை அமிர்தலிங்கம்
இலந்தச்சாலை, மணற்காடு -காரைநகர்

காரைநகர் இலந்தைச்சாலையை பிறப்பிடமாகவும், காரைநகர் மணற்காட்டை வதிவிடமாகவும்
கொண்ட வேலுப்பிள்ளை அமிர்தலிங்கம்(இளைப்பாறிய வைத்திய அதிகாரி) 27.01.2012 வெள்ளிக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான நாகநாதர் வேலுப்பிள்ளை இராசம்மா தம்பதியரின் அன்பு
மகனும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை – இலட்சுமிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும்
இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும், கௌரீஸ்வரி, கேதீஸ்வரி, சித்திரா ஆகியோரின் அன்புத்
தந்தையும், நாகேஸ்வரியின் சிறிய தந்தையும், நடராசா, சிவானந்தா, கிருபைராசா ஆகியோரின்
அன்பு மாமனும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், பார்வதி மற்றும் சிவபாக்கியம், தேவமங்கை, அன்னலெட்சுமி, கருணைலிங்கம், திலகவதி, சிவமணி, சபாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்காளான சேனாதிராசா, சிவானந்தராசா, பாலச்சந்திரன் மற்றுமு; சிவஞானவதி, மனோகரன், அருட்பிரகாசம், கோபாலபிள்ளை, பரமேஸ்வரி, ஈஸ்வரி
ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், காலஞ்சென்ற அருளானந்தத்தின் மைத்துனரும், சித்திரஞ்சன், சிந்துராகினி, அபிராமி, அருண்குமார் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 30.01.2012 திங்கட்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சாம்பலோடை மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
மணற்காடு, காரைநகர்

Leave a Reply