யா/ கலாநிதி ஆ.தியாகராஜா ம.ம.வித்தியாலயத்தில் (காரைநகர் இந்துக் கல்லூரி) கடந்த ஏழாண்டுகளாக நடைபெற்ற அபிவிருத்தி பணிகள் மற்றும் பாடசாலையின் வளர்ச்சி பற்றி பழைய மாணவர் சங்க தலைவர், செயலாளர்கள் என்ன கூறுகின்றார்கள்?
வாசிப்பதால் மட்டுமே மனிதன் பூரணம் அடைகின்றான்
கடந்த காலம் பற்றி முற்று முழுதாக தெரிந்து கொள்வதன் மூலமே
எதிர்காலத்தை பயனுள்ளதாக திட்டமிடமுடியும். எதிர்வரும் சனிக்கிழமை
28.01.2012 அன்று கனடா காரை கலாச்சார மன்றத்தினரால் காரைநகர்
இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் கனடாவில்
ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 1, 2012 அன்று காரைநகரில் நடைபெற்ற பழைய மாணவர் சங்க
பொதுக்கூட்டத்தின் போது 2004ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு
வரையான வரவு செலவு கணக்கு விபரம் மற்றும் செயலாளர் அறிக்கை,
தலைவர் அறிக்கை என்பனவும் ஒரு புத்தக வடிவிலாக வெளியிடப்பட்டது.
அந்நூலின் முழு வடிவமும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை. தலைவர்
மற்றும் செயலாளர் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. கனடா காரை
கலாச்சார மன்றம் 2004ம் ஆண்டுகளிற்கு முன்னரும் பின்னரும்
பலவகையிலும் காரை இந்துக்கல்லூரி பழைய மாணவர் சபையினூடாக
சில செயற்பாடுகளை நிறைவேற்றியுள்ளதுடன் இன்னமும் கனடா காரை
கலாச்சார மன்றத்தின் உதவியாக 10இலட்சம் ரூபாய்கள் வரையான நிதி
காரைநகர் இந்துக்கல்லூரியின் கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் பழைய மாணவர் சங்க செயலாளர் மற்றும் தலைவர்களது
அறிக்கையில் கனடா காரை கலாச்சார மன்றத்தின் பெயர்
எந்தவகையிலும் குறிப்பிடப்படாது உள்ளது விசனத்திற்குரியது.
2012 ஜனவரி 01 அன்று வெளியிடப்பட்ட பழையமாணவர் சங்க வரவு
செலவு அறிக்கை முற்று முழுதாக கிடைக்கப்பெற்ற பின்னர் அவற்றினை
விபரமாக இந்த இணையத்தளத்தில் எடுத்து வருவதுடன் அது பற்றிய
விளக்கமான விமர்சனத்தையும் நாம் இங்கே எடுத்து வருவோம்.
காரைநகரில் ஜனவரி 01, 2012 அன்று புதிய நிர்வாகத்திற்கு தலைவராக
தற்போதைய பாடசாலையின் அதிபர் பொன் சிவானந்தராசா அவர்களும்,
செயலாளராக கிராம சேவையாளரும், முன்னாள் ஆசிரியருமான
இ.திருப்புகழூர்சிங்கம் அவர்களும், பொருளாளராக வியாவில் சைவ
வித்தியாலய ஆசிரியர் பா.இராமகிருஸ்ணண் அவர்களும் தெரிவு
செய்யப்பட்டுள்ளார்கள்.
2004ம் ஆண்டு முதல் காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர்
சங்கத்தின் செயலாளராக கடமையாற்றிய திரு.வே.சபாலிங்கம் மற்றும்
2010ம் ஆண்டு முதல் தலைமையேற்ற பாடசாலையின் அதிபர் பொன்
சிவானந்தராசா அவர்களின் விளக்கமான உரையினையும் இன்றைய
பாடசாலையின் நிலமையினையும் நன்றாக உணர்ந்து கொள்ளவும்
விளங்கிக்கொள்ளவும் அறிந்து கொள்ளவும்
‘வாசிப்பதால் மட்டுமே மனிதன் பூரணம் அடைகின்றான்”
அதிபர் பொன் சிவானந்தராஜா அவர்களின் தலைவர் அறிக்கை










செயலாளர் அறிக்கை










