Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

மேன்மை தங்கிய ஜனாதிபதி அநுர திசநாயக்க வரலாற்று நாயகனே..!

காரைநகர் கடல்கோட்டையில்(ஹம்மல் கீல்) கைது செய்து வைக்கப்பட்டிருந்த JVP யின் தலைவர் றோகன விஜயவீர அவர்களது கைப்பட எழுதிய வாசகங்கள் கடந்த பல ஆட்சியாளர்களினாலும் பாதுகாக்கப்பட்டு இன்னமும் பார்வையிடும் வண்ணம் உள்ளதும், இன்று அவரது காலத்தில் அவருடைய கொள்கைகளின்படி அரசியலில் கால்பதித்து இலங்கையின் சர்வவல்லமை பொருந்திய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள அநுர திசநாயக்கவும் வரலாற்றில் எதையோ ஒன்றை நிரூபித்துள்ளார்கள்.

மிகவும் குறுகிய காலத்தில் வரலாறுகள் மீள திருத்தி எழுதப்பட மேன்மை தங்கிய ஜனாதிபதி அநுர திசநாயக்க வரலாற்று நாயகனே..!

Leave a Reply