அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்

முகநூலில் சில செய்திகள், விபரங்கள் பார்த்துவிட்டு கடந்து போய்விட முடியாது. பரிகாரம் தேடியே ஆகவேண்டும்.

காரைநகர் ஊரி கிராமம்… கைகுழந்தை உட்பட 5வயது, 9 வயது என மூன்று ஆண் குழந்தைகள்.

June 24 அன்று இரவு வீசிய மினிசூறாவளியில் பனை விழுந்து அவர்களுடைய குடிசை வீடு சிதைந்து போனது.

தற்காலிக குடிசை வீடு அமைத்துக்கொடுக்க முடியுமா என இப்பகுதி கிராம சேவகர் திரு.மயூரன் அவர்கள் June 27 அன்று தொடர்பு கொண்டார்.

காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக 77,400 ரூபா June 28 அனுப்பிவைக்கப்பட்டது. Aug 07ம் திகதி வரை தற்காலிக குடிசை வீடு அமைத்துக்கொடுக்கும் பணியில் எதுவித முன்னேற்றமும் இல்லை.

Aug 07 நேரடியாக சென்று 138,000 ரூபா வழங்கப்பட்டது. உடனடியாக தற்காலிக குடிசை வீடு அமைக்கும் வேலை தொடங்கப்பட்டது.

இன்றுவரை 26.09.2024 வரை காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக வழங்கப்பட்ட 77,400 ரூபாய்கள் இன்னமும் அந்த ஊரிற்கு தண்ணி வித்து பிழைப்பு நடாத்தும் அமைப்பினால் 77,400 ரூபாய்களை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வழங்க முடியாதுள்ள நிலையில் இதுவரை வழங்கப்பட்ட 138,000 ரூபா நிதியில் தற்காலிக குடிசை வீடு அமைக்கும் பணியில் ஏற்பட்ட செலவு விபரங்களையும் மேற்கொண்டு தற்காலிக குடிசை வீட்டை அமைக்க ஏற்படும் உத்தேச செலவையும் பாதிப்படைந்த குடும்பத்தினர் அனுப்பி வைத்துள்ளனர்.

இன்னமும் 265,000(இரண்டு இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய்கள்) வழங்கினால் தற்காலிக குடிசை வீட்டில் மூன்று பிள்ளைகளை உடைய குடும்பம் மீண்டும் குடியேறும்.

இதுவரை எம்மால் வழங்கப்பட்ட 138,000 ரூபாவிற்கான பொருள் கொள்வனவிற்கான ரசீதும், மேற்கொண்டு முற்றுப்பெற வேண்டிய வேலைக்கான உத்தேச மதிப்பீடும் பாதிப்படைந்த குடும்பத்தினரால் அனுப்பப்பட்டதும் இணைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இனி எந்த அமைப்புக்களையும் நம்பி பயன் இல்லை என்பதால் நேரடியாக பாதிப்படைந்த குடும்பத்தின் வங்கி கணக்கு விபரமும் இணைக்கப்பட்டுள்ளது. உங்களால் முடிந்த உதவிகளை நேரடியாக அனுப்பி வையுங்கள்.

பொதுப்பணி ஒன்றை நிறைவேற்ற ‘எனது ஊர் காரைநகர்’ முடிவு எடுத்துவிட்டால் அதற்கான காரணம் ஒன்றே ஒன்று தான். அந்த பணி எல்லாவகையிலும் செய்யப்பட வேண்டியதொன்று என்ற ஒரே ஒரு காரணம் மட்டும் தான். காரணங்கள் கண்டு பிடிப்பதில்லை.

பொறுப்புள்ள குடும்ப தலைவன், கைகுழந்தை உட்பட பச்சிழம் குழந்தைகள் மூன்று, கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலகத்தின் வேண்டுகோள். இதற்கு மேலும் எந்த காரணங்களும் தேவையில்லை.

வெளிநாடுகளில் உள்ளவர்கள் மட்டும் தான் இந்த குடும்பத்திற்கு தம்மாலான உதவி செய்ய வேண்டும் என்பதல்ல. ஊரிலும் இலங்கையிலும் இருப்பவர்களும் கூட உதவி செய்யலாம். கோபுரம் கட்டவும், திருவிழா நடாத்தவும் மட்டும் தான் காரைநகரான் கோடி கோடியாக கொட்டுவான் என்பதை விட வெறும் ஆயிரங்களில் ஒரு குடும்பத்திற்கான குடிசை என்னும் கோயிலை அமைத்துக்கொடுப்பதிலும் காரைநகரான் கருத்தில் கொள்வான் என்பதை புரிய வையுங்கள்.

தயவு செய்து இந்த விபர பதிவிற்கு லைக் போடாதீர்கள்.

ஊரில் உள்ள எவராவது இந்த பதிவிற்கு லைக் போட நினைத்தால் கீழ்வரும் அந்த குடும்பத்தின் வங்கி கணக்கிற்கு 1000 ரூபா அனுப்பி போட்டு லைக் போடவும். உங்கள் மனச்சாட்சிக்கு கட்டுப்படுங்கள். தானம், தர்மம் செய்வதற்கு கேள்வி கேட்காதீர்கள். நம்பிக்கை முக்கியம். நம்பிக்கை தான் கடவுள்.

நம்பிக்கையோடு உங்களால் இயன்ற நிதி அனுப்ப வேண்டிய காரைநகர் ஊரி கிராம பாதிப்படைந்த குடும்ப தலைவியின் வங்கி கணக்கு விபரம் வருமாறு:

Mrs.S.Reka

Bank of Ceylon, Karainagar branch: 749

A/C number: 918 53585

நீங்கள் போட்ட பணம் உரியவர்களிடம் சென்றடைந்ததா என்பதை உறுதிப்படுத்த வேண்டுமாயின் எனக்கு அறியத்தாருங்கள், அல்லது இதன் மூலம் ‘எனது ஊர் காரைநகர்’ விளம்பரம் தேடுவதாகவோ அல்லது கடவுளை நம்பி பணம் போட்டால் அது உரியவரை சென்றடைந்திருக்கும் என முழுமையாக நம்பினால் எனக்கு அறியத்தர வேண்டியது இல்லை.

கடவுள் தனக்கு தேவையானவற்றை கேட்க முகநூல் ஊடாகவும் உங்களிடம் வருவான். அதனை என்மூலமாகவும் செய்வான். நீங்கள் செய்யும் தான தர்ம காரியங்களில் எனக்கு பங்கு இல்லை. நான் வெறும் கருவி மட்டுமே. கடவுள் சிலரை அதற்காக மட்டுமே படைத்திருக்கிறான். கடவுளிற்கு நன்றி.!

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

மேன்மை தங்கிய ஜனாதிபதி அநுர திசநாயக்க வரலாற்று நாயகனே..!

‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக கல்வி செயற்பாடுகளின்காக உதவி வழங்கப்பட்ட மாணவன் ஒருவனின் O/L பரீட்சை பெறுபேறு

Leave a Reply