நாள் : Monday, September 7, 2026
--:--:--
👁️
AGM

பிரித்தானியா காரை நலன்புரிச்சங்கத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் 2024

பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் ஊடாக ஊரிற்கான அளப்பரிய பணிகளை நிறைவேற்றுபவர்கள் சங்கத்தின் நிர்வாக பொறுப்புக்களை பெற்றுக்கொண்டார்கள்.

பிரித்தானியா காரை நலன்புரிச்சங்கத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் 23.06.2024 இன்று நடைபெற்றிருந்தது.

இன்றைய பொதுக்கூட்டத்தின் போது கடந்த பல ஆண்டுகளாக தமது சொந்த நிதியின் ஊடாகவும் பிரித்தானியா வாழ் காரை மக்களின் நம்பிக்கையின் ஊடாக ஊர்ப்பணியில் நன்மதிப்பை பெற்றவர்களுமான திரு. வி. நாகேந்திரம் அவர்கள் தலைவராகவும், திரு.ப.தவராசா செயலாளராகவும். திரு.இராஜேந்திரசோழன் தர்ஷன் பெருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

காரை மண்ணிற்காக தமது சொந்த உழைப்பினூடாக கடந்த பல ஆண்டுகளாக பல மில்லியன் ரூபாய்களை வழங்கியதுடன் மண்ணின் தேவைகளை கண்டறிந்து நிறைவேற்றிவரும் ஊர்ப்பணியாளர்கள் பிரித்தானியா காரை நலன்புரிசரசங்கத்தின் நிர்வாக பொறுப்பை பெற்றுக்கொண்டுள்ளமையானது காரை மண் மேலும் வளர்ச்சியடையும் என்பதில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமற்ற வகையில் நிரூபணம் ஆகியுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக காரை மண்ணின் எப்பணியானாலும் இவர்களது நிதி உதவியும் ஆதரவும் என்றுமே இருந்து வந்துள்ளதும், காரை மண்ணின் அபிவிருத்தியிலும் மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திலும் இவர்கள் காட்டி வரும் அக்கறைகள் ஊடாக பிரித்தானியா வாழ் காரை மக்கள் அங்கீகாரத்துடன் நிர்வாக சபை பொறுப்புக்களை கையளித்துள்ளனர்.

தமது சொந்த உழைப்பினூடாக மாதாந்தம், வருடாந்தம் சில விகிதம் வழங்கி ஊரை வளப்படுத்த இவர்கள் எடுத்து வரும் முயற்சிகள் ஏராளம்.

காரைநகர் பொது வைத்தியசாலை, காரைநகர் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான பணிகள், காரைநகர் விளையாட்டுக்கழகங்களிற்கான அனுசரணைகள், காரைநகர் ஈழத்து சிதம்பரத்தில் திருப்பணிகள், காரை இந்துவின் வளர்ச்சியில் செயற்பாடுகள் என தமது சொந்த நிதியின் ஊடாக பல கோடிகளை வளங்கியவர்கள் பிரித்தானியா காரை நலன்புரிச்சங்கத்தின் நிர்வாக பொறுப்புகளிற்கு தெரிவு செய்யப்பட்டு கெளரவம் பெற்றுள்ளார்கள். இவர்களது ஊர்ப்பணி பிரித்தானியா காரை நலன்புரிச்சங்கத்தின் ஊடாக மேலும் சிறப்பு பெறும் என்பதிலும் காரை மண் வளர்ச்சியடையும் என்பதிலும் எவரும் ஐயம் கொள்ள வேண்டியதில்லை என்பதையும் எனது ஊர் காரை மக்கள் நன்கு அறிவார்கள்.

சொந்த உழைப்பில் ஒரு ரூபாய் வளங்க முடியாத நிலையிலும் ஊர்ப்பணத்தில் உலை வைக்க துடிக்கும் பலருக்கும் இது பேரிடியாக அமையும் என்பதும், பொறாமை தீயில் கருகும் சிலரும் ஈழத்து சிதம்பரத்தின் நிர்வாகத்தை சீர்குலைத்து இரண்டாவது வருடமாக ஈழத்து சிதம்பரத்தின் பெரும் திருவிழாவான திருவெம்பாவை உற்சவத்தை நடாத்த முடியாதளவில் பாலஸ்தாபனம் என்னும் பெயரில் கோயிலையும் காரை மக்களின் சிவப்பணிகளிற்கும் முட்டுக்கட்டையாக இருந்து சிவ சொத்துக்களிற்காகவும் தமது சொந்த நலன்களிற்காகவும் பயன்படுத்திவரும் ஒரு சிலர் இதன் மூலம் தமது மனக்கிலேசங்களிற்கு வழிதேட முற்படுவார்கள் என்பதும் வெளிப்படையாக தெரிவதும் சிந்தனையும் ஊர்ப்பற்றும் உள்ள காரை மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.

உள்ளதை சொல்வோம் நல்லதை செய்வோம். இதுவே ‘எனது ஊர் காரைநகர்’

சிந்தனை உள்ளவர்களாக இடம்பெயர்ந்த நாடுகளில் செயற்படுவோம். சிந்திக்க முடியாத சிந்தனையற்ற பயன்ற்ற ‘C’ class மக்களின் வயிற்றெரிச்சல் பொறாமைகளை இனம் கண்டு செயற்படுங்கள் என கேட்டுக்கொண்டு இந்த உண்மைத்தகவல்களை முடித்துக்கொள்கிறேன்.

‘எனது ஊர் காரைநகர்’

தீசன் திரவியநாதன்

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மிக கவனமாக செயற்படுங்கள்.

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள்,...

31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக அனுமதி பெற்ற தேவையுடைய மாணவிக்கு மடிக்கணணி வளங்கியுள்ளது.

காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக தொடரட்டும் கல்விக்கான பணிகள். 31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக...

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஆறு பல்கலைக்கழக மாணவர்கள் , கல்விக்காக இன்னொருவரின் உதவிகளை வேண்டி நிற்கிறார்கள்.

காரைநகர் அபிவிருத்தி சபை செய்தி. காரைநகரில் இருந்து இந்த ஆண்டு 20 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தார்கள். அவர்களில் ஆறு...

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026 இந்த ஆண்டு(2026) ஜனவரி 21ம் திகதி காரைநகர் பெரியடைப்பில்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605