‘யார் குற்றினாலும் அரிசியாக வேண்டும்..’ என்னும் நோக்கில் செயற்படும் ஊரவர்களால் மட்டுமே ஊரை வளப்படுத்தவும், ஊரின் பெருமைகளை உலகறிய செய்யவும் முடியும்.
சமூக வலைத்தளங்களில் WhatsApp குறூப்புகளில் வசை பாடுபவர்களினாலும் ‘கோர்ட் கேசு’ என பயமுறுத்துபவர்களினாலும் ஊரிற்கோ, மண்ணிற்கோ, மக்களிற்கோ எந்த பயனையும் பெற்றுக்கொடுக்க முடியாது.
பிரித்தானியா காரை நலன்புரிச்சங்கத்தின் வருடாந்த கலை விழாவான ‘காரை கதம்பம்’ 15.02.2026 ஞாயிற்றுக்கிழமை இலண்டனில் நடைபெற்றது. 300 பார்வையாளர்கள் கலந்து கொள்ளக்கூடிய மண்ணபத்தில் 200 க்கும் மேற்பட்ட காரை ஊரவர்கள் கலந்து மண்ணையும் மக்களையும் பெருமைப்படுத்திக்கொண்டார்கள்.
இந்த அமைப்பின் ஒரு சில கடந்த கால நிர்வாக அங்கத்தவர்கள் இந்நிகழ்விற்கு காரை மக்கள் கலந்து கொள்ளக்கூடாது எனவும், கலந்து கொண்டால் WhatsApp குறூப்புகளில் உங்களுடன் சேர்த்து உங்கள் பிள்ளைகளையும் விமர்சிப்போம் என்றும் பயமுறுத்தியும், அதனை காரணமாக கொண்டு தனிப்பட்ட கோபதாபங்களிற்காக புறக்கணித்த சிலரையும் தாண்டி ஊரிற்காக, ஊரின் பெருமைகளிற்காக, ஊரின் ஒற்றுமைக்காக இலண்டனில் நடைபெற்ற பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் ‘காரை கதம்பம்’ மேடையேறியுள்ளது.
கலை நிகழ்வுகள் பெரும் வரவேற்பை பெற்றிருந்ததாக அறியப்படுகிறது. வரவேற்பும், உபசாரமும், உணவும் மிகவும் சிறந்த வகையில் கலந்து சிறப்பித்தவர்களை மகிழ்வித்திருந்தது எனவும், 400 பேர்கள் வரை எதிர்பார்த்த போதிலும் விருப்பு வெறுப்புகள் சுயநலங்கள் போட்டி பெறாமைகள் மிலேச்சத்தனம் ஒற்றுமையின்மை மற்றும் அச்சுறுத்தலால் பயந்தவர்கள் மற்றும் துர்குணங்களை உடையவர்கள் கலந்து கொள்ளாத நிலையில் ‘காரை கதம்பம்’ பிரித்தானியா இலண்டனில் வெற்றி வாகை சூடியுள்ளது.
இருப்பதை வைத்து சிறப்பாக செயற்படுத்திய பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் திரு. பொன்னையா ஞானானந்தன் தலைமையிலான நிர்வாக சபையினருக்கு வாழ்த்துக்கள். இன்றைய நிகழ்வுகளின் மூலம் காரை மக்கள் வெளிப்படுத்தியிருந்த ஒற்றுமையும் நல்லெண்ணமும் அதன் மூலம் அறுவடையான ஒவ்வொரு ‘Penny’ யும் காரை மண்ணின் வளர்சியில் பங்காற்றும் எனவும் இவ்வமைப்பின் செயலாளர் திரு.அம்பிகைபாகன் சிவபாதசுந்தரம் அவர்கள் மண்டபத்தில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத நிலையில் காரணங்களை வைத்திருக்கும் பிரித்தானியா வாழ் காரை மக்களும், பிரித்தானியா காரை நலன் புரிச்சங்கத்தின் கடந்த கால நிர்வாக உறுப்பினர்களும் கொஞ்சம் சிந்தியுங்கள். உங்கள் காரணங்கள் நியாயமானவையா…!



