கனடா காரை கலாசார மன்றத்தின் நிதி மற்றும் நிர்வாக செயல்பாடுகள் குறித்து கேள்விக்குறி – தன்வினை தன்னைச் சுடும்
‘தன்வினை தன்னைச் சுடும்’
கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவர் திரு.முத்து பொன்னம்பலம் கடந்த இரண்டு ஆண்டுகளிற்கு மேற்பட்டளவில் கனடா காரை கராசார மன்றத்தின் தலைவராக நிர்வாகப்பொறுப்பேற்றுள்ள நிலையில் கனடிய ஒன்ராரியோ மாநில இலாப நோக்கற்ற அமைப்புக்களின் அரச விதிகள் பலவற்றை மீறியுள்ளதும், கனடா காரை கலாசார மன்றத்தின் யாப்பு விதிகளை மீறி செயற்பட்டு பலரிடம் வருடாந்த அங்கத்துவ பணம் பெற்றுற்றுள்ளதும் அதற்கான பற்றுச்சீட்டு வளங்காத நிலையில் வங்கி கணக்கு மற்றும் மொத்தமாக சுருட்டியுள்ளதும் அம்பலமாகியுள்ளது.
மேற்கொண்டு முழுமையாக வாசிப்பதன் மூலம் நடந்தது என்னவென்பதும் கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவர் திரு. முத்து பொன்னம்பலம் எவ்வாறு பல நூற்றுக்கணக்கானவர்களின் வருடாந்த அங்கத்தவர் பணம் மற்றும் அன்பளிப்புக்களை தனதாக்கிக்கொண்டுள்ளார் என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.
கனடா ஒன்ராரியோ மாநில இலாப நோக்கற்ற அமைப்பாக பதிவு செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளிற்கு மேலாக இயங்கி வந்த ‘கனடா காரை கலாசார மன்றம்’ ஒன்ராரியோ மாநில இலாப நோக்கற்ற அமைப்புக்களிற்கான கனடிய அரசின் சட்ட வரைமுறைகளிற்கு ஏற்ப அமைய வரவு செலவு அறிக்கைகளை வருடந்தோறும் பொதுக்கூட்டங்களை நடாத்தியும் அதன் அங்கத்தவர்களிற்கான அறிக்கைகளை வெளியிட்டு வந்துள்ளது.
ஆனால் 2024.04.28 அன்று அடாவடித்தனமான முறையில் கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவராக தன்னை மேலும் சிலரது உதவிகளுடன் பிரகடனப்படுத்திக்கொண்ட திரு.முத்து பொன்னம்பலம் இன்றுவரை (17.08.2026) இரண்டரை வருடங்கள் கடந்த நிலையிலும் வருடாந்தம் அங்கத்துவ பணம் செலுத்தியவர்கள் மூலம் பெற்றுக்கொண்ட பல்லாயிரம் டொலர்கள் மற்றும் அன்பளிப்புக்கள் என்பன தொடர்பான நிதியறிக்கை வெளியிடவில்லை என்பதும், மற்றும் அவருடைய நிர்வாகத்தில் செயலாளர், பொருளாளர் மற்றும் மற்றைய நிர்வாக சபை உறுப்பினர்களை பயமுறுத்தியும் அனைத்து பதவிகளையும் தானே நிர்வகித்து வருவதும், கனடா காரை கலாசார மன்றத்தின் அங்கத்துவர்களுடனான தொடர்புகளை கொண்டிருந்த இணையத்தளம், மற்றும் வங்கி கணக்குகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டு தனது சொந்த நிர்வாக சபை உறுப்பினர்களையே பயமுறுத்தி வருவதுடன் ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக சில தினங்களிற்கு முன்னர் இது தொடர்பாக தொடர்பு கொண்டு திரு. முத்து பொன்னம்பலத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது ‘ உனக்கு ஏன் நான் பதில் சொல்ல வேண்டும்..’ என்றும் ‘பண்ணிறதை பண்ணிப்பார் ..’ என்றும் கூறி எனது தொலைபேசி உரையாடலை துண்டித்துக்கொண்டார்.
கனடா காரை கலாசார மன்றத்திற்கு கடந்த 20 ஆண்டுகளாக வருடந்தோறும் வருடத்தின் முதல் நாளான ஜனவரி முதலாம் திகதி எனது வருடாந்த அங்கத்துவ பணம் $20 டொலர்கள் எனது வங்கிக்கணக்கில் இருந்து செல்கின்றது என்பதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக(2025, 2026) எனது அங்கத்துவ பணம் சென்றுள்ளதும் ஆனால் இதுவரை அதற்கான பற்றுச்சீட்டோ அன்றி இந்த மன்றத்தின் எந்தவிதமான அறிக்கைகளோ எனக்கு கிடைக்கப்பெறாத நிலையில் இந்த அமைப்பின் தலைவராக 28.04.2024 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைவராக தெரிவு செய்யப்பட்ட திரு. முத்து பொன்னம்பலம் அவர்கள் இன்னும் எந்த அடிப்படையில் இந்த மன்றத்தின் தலைவராக செயற்படுகிறார்..? அல்லது இவரை யாராவது கனடாவில் கண்டு கொண்டார்களா…?
கனடாவில் வாழும் மொத்த காரைநகர் மக்கள் தலையிலும் மிளாகாய் அரைத்துள்ள முத்து பொன்னம்பலத்தின் உண்மைக்கதையை கேட்டால் கனடிய ஒன்ராரியோ மாநில அரசின் இலாப நோக்கற்ற அமைப்பு கூட எங்கள் முகத்தில் ‘காறித்துப்பும்..’
எப்படிடா…! கடந்த இருபது ஆண்டுகளாக கனடாவில் ஒருவராலும் கண்களால் கண்டு கொள்ளப்படாத ஒருவரை பத்தாயிரத்து மேற்பட்ட காரைநகர் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அமைப்பிற்கு தலைவராக தெரிவு செய்தீர்கள் என்று…!
அது மட்டுமல்ல www.karainews.com என்ற ஒரு கனடாவில் பதிவு செய்யப்பட்ட இணையத்தளத்தில் திரு. முத்து பொன்னம்பலம் எனப்படும் நபர் தனது சொந்த பெற்றோரிற்கு எதிராகவே வழக்கு தொடர்ந்து பெற்றோரை குற்றவாளியாக்கி அவர்களிடமிருந்து பணம் சம்பாதித்தவர், அது மட்டுமன்றி சொந்த தகப்பனார் மரணப்படுக்கையில் அவர் விரும்பி கேட்டுக்கொண்ட போதும் இறுதி ஆசையையும் நிறைவேற்ற தவறியவர் அதுமட்டுமன்றி, இறுதிக்கிரியைகளிலும் கலந்து கொள்ள தவறியவர்…. என்று www.karainews.com ஆதாரத்துடனும் சாட்சிகளுடனும் எழுதியிருந்த போதிலும் இப்படியான ஒருவரை எப்படிடா தலைவராக ஏற்றுக்கொண்டார்கள்…?
இதோ கண்டு கொண்டார்கள்… ‘முயல் பிடிக்கிற நாயை மூஞ்சியில தெரியும்..’ என்பார்கள்.
திரு. முத்து பொன்னம்பலம் அவர்கள் கனடா காரை கலாசார மன்றத்தில் அடிப்படை அங்கத்தவராக கடந்த பத்து ஆண்டுகளிற்கு மேலாக இல்லாத ஒருவர், கனடிய ஒன்ராறியோ சட்ட வரைமுறைகளை தனக்காக பயன்படுத்திக்கொண்டு 19 நபர்களிற்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்து வருபவர்.
யதார்த்தமான வாழ்க்கை முறைகளிற்கு அப்பாற்பட்டு கனடாவில் தலைமறைவு வாழ்க்கையை கடந்த 20 ஆண்டுகளாக ‘புற்றுக்குள்’ வாழ்ந்து வரும் ஒருவரும், கனடாவில் மட்டுமன்றி எங்கேயுமே வாழத்தகுதியற்ற ஒருவரை கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவராக தெரிவு செய்துவிட்டு இரண்டரை ஆண்டுகளாக காத்திருக்கும் கனடா வாழ் காரைநகர் மக்கள் ‘எனது ஊர் காரைநகர்’ சொல்லும் செய்திகளிற்காக காத்திருக்கிறார்கள்.
இன்று இலங்கையிலேயே அநுர அரசின் ஆட்சியின் கீழ் அதிக பேச்சு சுதந்திரம் கிடைத்துள்ள நிலையில் கனடாவில் பழக்க தோஷத்தில் வாய் மூடிய நிலையிலும் சிந்திக்க திராணி அற்ற வகையிலும் நீங்கள் வாழ்கிறீர்கள் என்றால் நீங்கள் முட்டாளாக இருக்க வேண்டும் அல்லது படுசுயநலவாதியாக இருக்க வேண்டும். அதில் நீங்கள் யார்..? நீங்களாகவே உங்களை அறிந்து கொள்ளுங்கள்.
நான் கனடா எனும் உலகின் முதன்மையான நாட்டில், எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், தனிமனித சுதந்திரம் என்பவற்றை கொண்டு பல கலாச்சாரங்களையும் அனுசரிரித்து அவற்றை பயன்படுத்த அனுமதியளித்துள்ள உன்னதமான நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

Leave a Reply
You must be logged in to post a comment.