ஒரு மூடன் கதை சொன்னான்… என் கதை அது தான்..!
‘மெய்யழகன்’ படம் என் கதையின் சாயல். என் சைக்கிளிற்கும் அதே கதை உண்டு, என் வீட்டிற்கும் அதே கதை தான், என் கதையும் அதே கதை தான். ‘மெய்யழகன்’ படமல்ல, அது ஒரு கதையும் அல்ல… ஞாபகங்கள்… கதைக்கும் மேலாக அது எங்கள் வரலாறு…
இது ஒரு சினிமா படம் அல்ல… இதில் பாடல்கள் இல்லை… கமல்ஹாசனின் கதறல்கள் நெஞ்சை புழிந்து கண்ணூடாக அதன் ரசத்தை வெளிவரவைக்கும்.
உங்கள் கதையும் இதுவாகத்தான் இருக்கும்.
Facebook ஐ கொஞ்சம் தள்ளி வையுங்கள், சமூகவலைத்தள குறூப்புகளிற்கு ஒரு இரண்டு மணி நேரம் விடுப்பு வையுங்கள். மெய்யழகனை கொஞ்சம் பாருங்கள். இது சினிமா அல்ல. ஊரவனின் வாழ்க்கை. உங்களிற்குள் ஈரம் கசியும்.




