இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய்

“இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய்”

கனடா காரை கலாசாரமன்றத்திற்கு தன்னை தலைவராக 28.04.2024 அன்று வேண்டிப்பெற்ற பதவியை கொண்ட ‘இருண்டவன்’ ஒருவன் கனடா காரை கலாசார மன்றத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் தனது சொந்த வழக்கிற்கு ஆதாரம் தேடிக்கொண்டிருக்கிறார்.

கனடா காரை கலாசார மன்றமானது கடந்த 30 ஆண்டுகளாக கனடாவில் காரைநகர் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்து வருகின்ற அமைப்பாகும். ஊர் மன்றம் என்றால் விமர்சனங்களும் விதண்டாவாதங்களும் அவ்வப்போது வந்து சென்றாலும், மன்றமானது ஒரு போதும் ஸ்தம்பித நிலமையினை அடைந்தது இல்லை. கோவிட் பெருந்தொற்று காலத்திலும் முடிந்தளவு பணிகளை ஆற்றியதுடன் கனடா காரை கலாசார மன்றம் தன்னை தக்க வைத்துக்கொண்டது.

ஆனால் 28.04.2024 க்கு பின்னர் ‘குரங்கின் கையில் பூமாலை” என்கிற ரீதியில் கனடா காரை கலாசார மன்றம் “இருண்டவன்” கைகளில் கையளிக்கப்பட்டது. ‘இருண்டவன்’ ஒருவரையும் வாழவிடான். சரியாக சொன்னால் ‘வைக்கோல் பட்டறை நாய்’ காரணம் உலகின் முதல்தர நாடுகளில் ஒன்றான கனடா நாட்டில் அவனால் வாழ முடியவில்லை. பெற்றோர் இல்லை, குடும்பம் இல்லை. உறவுகள் இல்லை, நண்பர்கள் இல்லை, சமுதாயம் இல்லை. கற்பனை உலகில் அனைத்தையும் இழந்து இருட்டில் வாழும் ‘இருண்டவன்’. 20க்கும் மேற்பட்டவர்களிற்கு அந்த இருண்டவன் போட்ட மானநஷ்ட ஈடு வழக்குகள் அதற்கு சான்று.

சொந்த தாய், தகப்பன், கனடாவில் முதன்முதலில் வேலை கொடுத்த நண்பன், மற்றும் உறவாடியய உறவினர்கள், 2013 முதல் 2015 வரை தினமும் பலமணி நேரம் என்னோடு தனது நேரத்தை செலவிட்டு ஊரையும், மன்றத்தையும், மண்ணையும், என்னையும் பற்றி அறிந்து கொண்டு எனக்கு எதிராகவும் போட்ட வழக்குகள் அதற்கான சான்றுகள். அந்த இருண்டவன் கண்ணிற்கு மருண்டதெல்லாம் பேயாக தெரிகிறது.

காரைநகர் மக்களின் சம்பிரதாயங்களில் ஒன்று, கோர்ட்டுக்கு போனவன் குடும்பம் பரம்பரை பரம்பரையாக பகையாளிகாளாக வாழ்வார்கள். அதைவிட ‘இருண்டவன்’ ஊரிற்காகவோ, மண்ணிற்காகவோ, மன்றத்திற்காகவோ, மக்களிற்காகவோ அல்லது உறவுகளிற்காகவோ, அதையும் விட பிச்சைக்காகவேனும் பத்து பைசா ஈர்ந்தவன் அல்ல. ஏனெனில் அவனது இயலாமையின் காரணமாக அவனது சித்தாந்தம்.

காரை மண்ணில் பாடசாலைகளோ அல்லது ஊர் அபிவிருத்திகளோ அரசினால் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்றும் அது அரசின் கடமை மட்டுமேயன்றி, எவரும் அதற்கு உதவக்கூடாது என்பதும். இலங்கை அரசாங்கமே பாடசாலைகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுடன். கனடாவிலும் காரைநகர் மக்கள் வழங்கும் ” வரி ” பணத்தின் ஊடாக கனடிய அரசாங்கத்தையும் எமது காரை மண்ணிற்கான உதவிகளை நிறைவேற்ற கேட்க வேண்டும் எனவும் வித்தியாசமான சித்தாந்தங்களை இருட்டிலே சிந்தித்து வாழ்கின்ற ‘இருண்டவன்”.

அதனால் தான் அவனை வைத்து அவனது சித்தாந்தங்களை நிறைவேற்ற அவனையே தலைவனாக்க முடிவு பலரலும் எடுக்கப்பட்டு இருட்டிலே இருந்தாலும் Zoom எனப்படும் தொடர்பாடல் மூலம் தனது முகம் கூட காட்ட முடியாத நிலையிலும் தலைமை பதவிக்கு விண்ணப்பித்திருந்த “இருண்டவனை” தலைவனாக்கியது கனடா காரை கலாசார மன்றத்தின் பொதுச்சபை.

ஆனாலும் “இருண்டவன்” தன்னிலை அறியாது, கனடா காரை கலாசார மன்றத்தின் கடந்த 30 ஆண்டுகால வரலாற்றை அறியாத நிலையில் தனது குடும்பத்தை இழந்தது போன்று, தனது பெற்றோரை இழந்தது போன்று, தனது நண்பர்கள், ஊரவர்கள், அனைவரையும் இழந்து இருட்டில் வாழ்வது போன்று எதற்கும் இலாயக்கற்றவனாக இன்று தன்னை நிரூபித்து வருகின்றார். காலம் நின்று பதில் சொல்லும். அதனை காரை நியூஸ் கண்டு சொல்லும்.

இந்த இருண்டவன் தேடுவது எல்லாம் நாலு முழம் கயிறும் அதில் மூன்று முடிச்சுகளும் மாத்திரமே. மனித சமுதாயத்திற்கு எந்தளவிலும் ஒவ்வாத சிந்தனைகளை கொண்டு வாழுகின்ற ஒருவரிற்கு கடைசியில் தேவைப்படுகின்ற ஒரு பொருள் நாலு முழம் கயிறு மாத்திரமே. ஒருவேளை அதற்கும் தனது சொந்த பணத்தை செலவு செய்ய தயங்கினால் அதனை முழுமையாக அனுசரணை வழங்கி தரமான கயிற்றினை வேண்டி வழங்க நான் முன்வருகின்றேன்.

-தீசன் திரவியநாதன்

எனது ஊர் காரைநகர்

03.09.2024

More From Author

வடமாகாணத்தில் விளையாட்டுத்துறையில் காரைநகர் கோட்டமும் தீவக வலயமும் கடைசி இடத்தில்…!

பொதுப்பணிக்கு வந்துவிட்டால் எல்லாவற்றையும் திறந்து காட்டிவிடவேணும்.

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Archive

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Recent Comments

No comments to show.