நாள் : Saturday, September 12, 2026
--:--:--
👁️
Annadanam

காரை மண் சிவ பூமி. பசிக்கு உணவு போடும் காரை சிவன்.

காரை மண்ணில் மிகவும் பிரசித்தமானது கசூரினா கடற்கரையாக இருந்த போதிலும் பின்னர் இலங்கையின் இரண்டாவது மிகப்பெரும் கடற்படை தளமாக அறியப்பட்ட போதிலும் இல்லாத பெருமையை காரை மண் தன்னை சிவபூமியாக படிப்படியாக வளர்த்துக்கொண்டு அதன் அடி நாதமாக திண்ணபுரம் சிவன் கோயிலாகவும் பின்னர் ஈழத்து சிதம்பரமாக புகழ் விளங்க இரண்டு இராஜகோபுரங்களுடன் மிளிரும் காரைநகர் சிவன் கோயில் என்பதில் இன்று எவருக்கும் இரண்டாம் கருத்திற்கும் இடம் இல்லை.

அந்த வகையில் காலத்தின் தேவைகளிற்கு ஏற்ப அடியவர்களிற்கு உணவளிப்பதுலும் சிறந்து விளங்கி வந்துள்ளது.

திருவிழா காலங்களில் மணிவாசகர் மடாலயத்திலும், வருடத்தின் 365 நாட்களிலும் தியாகராஜா மகேஸ்வரன் அறப்பணி நிலையத்தின் ஊடாகவும் அன்னதான பணிகள் நடைபெற்று வந்துள்ளன.

அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக கோயில் திருப்பணிகளிற்காக பாலஸ்தாபனம் செய்யப்பட்டு தினப்பூசைகள் மட்டும் நடைபெற்று வந்தாலும் கோயில் உட்பிரகாரமாக கருதப்படும் வீதியில் கோயில் நிர்வாகத்தால் அன்னதானம் மட்டுமன்றி அடிப்படை வசதிகளுடன் கூடியளவில் அடியவர்கள் பசி போக்கும் வகையில் 365 நாட்களும் மதிய நேர அன்னதான பணி நடைபெற்று வருகிறது.

சமைத்த உணவுகள் எந்நாளும் வளங்கப்பட்டு வருகிறது.

26.11.2024 இன்றைய காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் காரைநகர் பெரும் அடைமழையால் பாதிப்புக்குள்ளான நிலையில் ஈழத்து சிதம்பரத்தின் உட்பிரகாரத்தில் கோயில் நிர்வாகத்தால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அன்னதான மண்டபத்தில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

இதுவரை காலமும் காரைநகரில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களும், கசூரினா கடற்கரைக்கு வரும் சுற்றிலா பயணிகளும் தமது மதிய நேர பசியாற பேருதவி புரிந்து வந்த ஈழத்து சிதம்பரம் நிர்வாக அன்னதான பணியில் காரைநகரில் இன்று வெள்ளத்தால் பாதிப்படைந்து உள்ள அனைவருக்கும் மதிய நேர அன்னதானம் வழங்கப்படவுள்ளது.

அரச உதவிகள் ஊடாக உங்களிற்கான உடனடி சமைத்த உணவுகள் வருவதற்கு தாமதமாகலாம், அல்லது உணவின்றி காரைநகர் மக்கள் உதவியின்றி தவிப்பதாக ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டு மகிழலாம் ஆனால் காரைநகர் சிவன் இரு கரம் கொண்டு உங்களை அழைக்கிறான்.

கோயில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டிருந்தாலும் அடியவர்களிற்கு பசி போக்கும் அன்னதான பணியே முதல் பணியாக செயற்பட்டு வரும் காரைநகர் ஈழத்து சிதம்பரம் தேவையறிந்து சமைத்த உணவுகளை வெள்ளத்தால் பாதிப்படைந்து சமைத்த உணவின்றி சிரமப்படும் மக்களிற்கு உணவு பார்சல்களை வழங்கவும் பரமேஸ்வரன் துணையுடன் அடுத்து வரும் சிரம்மான நாட்களில் தீர்மானிக்கவுள்ளது.

ஊரவர்களிற்கு உதவ வெளிதாடுகளில் இருந்தோ அன்றி அரச இயந்திரங்களோ முன்வரவில்லை என்ற அலறல்கள் வருவதற்கு முன்னரே ஈழத்து சிதம்பரம் என போற்றப்படும் காரைநகர் சிவன் கோயில் நிர்வாகமும் அதன் துணை நிர்வாகங்களும் முன்னெடுக்கும் காலமறிந்து உணவளிக்கும் செயற்பாடுகளை வெளிநாடு வாழ் மக்களும் அரசும் மதிப்பளித்து பாராட்டும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் முதன் முறையாக ஆவணி விநாயகர் சதுர்த்தி நன்னாளை தீர்த்தோற்சவமாகக்கொண்டு 06.09.2026 ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் முதன் முறையாக ஆவணி விநாயகர் சதுர்த்தி நன்னாளை...

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மிக கவனமாக செயற்படுங்கள்.

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள்,...

31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக அனுமதி பெற்ற தேவையுடைய மாணவிக்கு மடிக்கணணி வளங்கியுள்ளது.

காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக தொடரட்டும் கல்விக்கான பணிகள். 31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக...

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஆறு பல்கலைக்கழக மாணவர்கள் , கல்விக்காக இன்னொருவரின் உதவிகளை வேண்டி நிற்கிறார்கள்.

காரைநகர் அபிவிருத்தி சபை செய்தி. காரைநகரில் இருந்து இந்த ஆண்டு 20 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தார்கள். அவர்களில் ஆறு...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605