காரை மண்ணில் மிகவும் பிரசித்தமானது கசூரினா கடற்கரையாக இருந்த போதிலும் பின்னர் இலங்கையின் இரண்டாவது மிகப்பெரும் கடற்படை தளமாக அறியப்பட்ட போதிலும் இல்லாத பெருமையை காரை மண் தன்னை சிவபூமியாக படிப்படியாக வளர்த்துக்கொண்டு அதன் அடி நாதமாக திண்ணபுரம் சிவன் கோயிலாகவும் பின்னர் ஈழத்து சிதம்பரமாக புகழ் விளங்க இரண்டு இராஜகோபுரங்களுடன் மிளிரும் காரைநகர் சிவன் கோயில் என்பதில் இன்று எவருக்கும் இரண்டாம் கருத்திற்கும் இடம் இல்லை.
அந்த வகையில் காலத்தின் தேவைகளிற்கு ஏற்ப அடியவர்களிற்கு உணவளிப்பதுலும் சிறந்து விளங்கி வந்துள்ளது.
திருவிழா காலங்களில் மணிவாசகர் மடாலயத்திலும், வருடத்தின் 365 நாட்களிலும் தியாகராஜா மகேஸ்வரன் அறப்பணி நிலையத்தின் ஊடாகவும் அன்னதான பணிகள் நடைபெற்று வந்துள்ளன.
அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக கோயில் திருப்பணிகளிற்காக பாலஸ்தாபனம் செய்யப்பட்டு தினப்பூசைகள் மட்டும் நடைபெற்று வந்தாலும் கோயில் உட்பிரகாரமாக கருதப்படும் வீதியில் கோயில் நிர்வாகத்தால் அன்னதானம் மட்டுமன்றி அடிப்படை வசதிகளுடன் கூடியளவில் அடியவர்கள் பசி போக்கும் வகையில் 365 நாட்களும் மதிய நேர அன்னதான பணி நடைபெற்று வருகிறது.
சமைத்த உணவுகள் எந்நாளும் வளங்கப்பட்டு வருகிறது.
26.11.2024 இன்றைய காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் காரைநகர் பெரும் அடைமழையால் பாதிப்புக்குள்ளான நிலையில் ஈழத்து சிதம்பரத்தின் உட்பிரகாரத்தில் கோயில் நிர்வாகத்தால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அன்னதான மண்டபத்தில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
இதுவரை காலமும் காரைநகரில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களும், கசூரினா கடற்கரைக்கு வரும் சுற்றிலா பயணிகளும் தமது மதிய நேர பசியாற பேருதவி புரிந்து வந்த ஈழத்து சிதம்பரம் நிர்வாக அன்னதான பணியில் காரைநகரில் இன்று வெள்ளத்தால் பாதிப்படைந்து உள்ள அனைவருக்கும் மதிய நேர அன்னதானம் வழங்கப்படவுள்ளது.
அரச உதவிகள் ஊடாக உங்களிற்கான உடனடி சமைத்த உணவுகள் வருவதற்கு தாமதமாகலாம், அல்லது உணவின்றி காரைநகர் மக்கள் உதவியின்றி தவிப்பதாக ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டு மகிழலாம் ஆனால் காரைநகர் சிவன் இரு கரம் கொண்டு உங்களை அழைக்கிறான்.
காலநிலை வெள்ளத்தினால் தமது குடியிருப்புக்களில் வெள்ளம் புகுந்து எதிர்வரும் சில நாட்களில் சமைத்த உணவை அரசாங்கம் வீடு தேடி வந்து தரவில்லை என்று புலம்பாது, காரை சிவன் ஆலயத்தில் தினமும் 365 வழங்கப்படும் அன்னதான நிகழ்வில் கலந்து கொண்டு கோயில் நிர்வாகத்தின் அன்னதான பணியில் இணைந்து கொள்ளுங்கள்.
கோயில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டிருந்தாலும் அடியவர்களிற்கு பசி போக்கும் அன்னதான பணியே முதல் பணியாக செயற்பட்டு வரும் காரைநகர் ஈழத்து சிதம்பரம் தேவையறிந்து சமைத்த உணவுகளை வெள்ளத்தால் பாதிப்படைந்து சமைத்த உணவின்றி சிரமப்படும் மக்களிற்கு உணவு பார்சல்களை வழங்கவும் பரமேஸ்வரன் துணையுடன் அடுத்து வரும் சிரம்மான நாட்களில் தீர்மானிக்கவுள்ளது.
அது மட்டுமன்றி திருவிழா காலங்களில் வெளிநாட்டு மக்களிற்கும் வெளியூர் மக்களிற்கும் உணவளித்து வரும் மணிவாசகர் மடாலய அன்னதான சபையும் தமது வைப்பில் உள்ள மூன்று கோடி ரூபாய்கள் நிதியில் இருந்து காலநிலையால் பாதிப்படைந்து சமைத்த உணவின்றி வாடும் மக்களிற்கு உணவு பார்சல்களை வழங்க தமது நிர்வாகத்தை கூட்டி அந்நிதி ஊடாக ஒரு நேர உணவு வழங்க முடிவு எடுக்கவுள்ளதாகவும் அறியப்படுகிறது.
ஊரவர்களிற்கு உதவ வெளிதாடுகளில் இருந்தோ அன்றி அரச இயந்திரங்களோ முன்வரவில்லை என்ற அலறல்கள் வருவதற்கு முன்னரே ஈழத்து சிதம்பரம் என போற்றப்படும் காரைநகர் சிவன் கோயில் நிர்வாகமும் அதன் துணை நிர்வாகங்களும் முன்னெடுக்கும் காலமறிந்து உணவளிக்கும் செயற்பாடுகளை வெளிநாடு வாழ் மக்களும் அரசும் மதிப்பளித்து பாராட்டும் என்பதில் சந்தேகமில்லை.




