‘கறுப்பு வெள்ளை காலம்’ என்று ஒன்று இருந்தது. அப்போது படங்கள் அல்லது சினிமா எல்லாம் கறுப்பு வெள்ளை கலரில் மட்டும் செய்யத்தெரிந்த காலம்.
கலர்களிற்கு வந்த பின்னர் ‘கறுப்பு வெள்ளை காலத்திற்கு’ செல்ல முடியாது, முடிவதில்லை. காரணம் அந்த காலம் இனி திரும்ப வராது.
ஆமாம்…. கருப்பு வெள்ளை காலம் இனி ஒருபோதும் திரும்ப வராது…. அதனால் அதனை அனுபவியுங்கள். அதற்கு கரி அடித்து தடுத்து விடாதீர்கள்.
“தாடி ஏன் வளர்க்கிறாய்…! என்று பலரும் என்னை கேட்டாலும். ‘சத்தியமாக சொல்கிறேன் ‘தாடி நான் வளர்க்கவில்லை’ அது தானாக வளர்கிறது.
எனவே ஒருவேளை வளர்கிற தாடியை நான் ஏன் வெட்டவில்லை என்று கேட்டால் அதற்கு என்னிடம் பதில் இருக்கலாம். ஆனால் … தாடி ஏன் வளர்கிறாய் என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை…!
கேள்வியை மாத்தி கேளுங்கப்பா…!
புரிஞ்சுதா……… புரிஞ்சுதா…!
மாறவேண்டியது அவர்கள் அல்ல நாம் தான்.




