கனடா காரை கலாசார மன்றத்தின் கடந்த கால செயற்பாடுகள்

கனடா காரை கலாசார மன்றம் கடந்த எட்டு ஆண்டுகளில் ஐந்து கோடிக்கு மேற்பட்ட நிதியினை காரை மண் அபிவிருத்திக்காக அனுப்பி வைத்துள்ளது.

2015ம் ஆண்டுக்கு பின்னர் கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாகத்தை தலைமையேற்று நடாத்திய தலைவர்கள்

1).திரு.தம்பிஐயா பரமானந்தராசா (2015-2017)

2).திரு.சபாரத்தினம் பாலச்சந்திரன் ( 2017-2018)

3).திரு.சிவசுப்பிரமணியம் சிவராமலிங்கம் (2019-2020)

4).திரு. சிவசம்பு சிவநாதன் (2021-2023)

ஆகியோரை தலைமையாகக் கொண்ட நிர்வாக சபைகளினால் கனடாவில் மன்றத்தின் செயற்பாடுகளிற்காக இலங்கை ரூபாயில் 25 கோடிக்கு மேற்பட்டளவில் பெறப்பட்டுள்ள போதிலும் அண்ணளவாக இவற்றின் ஐந்தில் ஒரு பகுதியான ஐந்து கோடி ரூபாய்கள் வரை காரை மண்ணின் அபிவிருத்திகளிற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த எட்டு ஆண்டுகளில் நடைபெற்ற ஆறு ‘காரை வசந்தம்’ நிகழ்வுகளின் போது மட்டும் மண்ணிற்கான தேவைகளை வலியுறுத்தி ‘காரை வசந்தம்’ நிகழ்வுகள் நடைபெற்றதும் அதன் மூலம் ஊரின் அபிவிருத்தியை, கல்வி வளர்ச்சியை முன்னிறுத்தி விழாவிற்கு தேவையான நிதியைவிட விளம்பரதாரர்கள், அங்கத்தவர்கள், நலன்விரும்பிகள் விரும்பியளித்த நிதியின் ஊடாக விழாவிற்கான செலவுகள் போக எஞ்சிய நிதி பல்வேறு தேவைகளிற்காக காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காரைநகர் அபிவிருத்தி சபையின் வருடாந்த கணக்கறிக்கைகள், கனடா காரை கலாசார மன்றத்தின் கணக்கறிக்கைகள் ஊடாக இதன் முழுமையான விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.

2015ம் ஆண்டு மட்டும் காரைநகர் பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை முன்னிறுத்தி கனடா வாழ் காரைநகர் மக்களிடம் அதற்கென தனிப்பட்டளவில் நிதி சேகரிக்கப்பட்டிருந்ததும், அதற்கென வழங்கியவர்களின் நிதி காரைநகரின் 12 பாடசாலைகளிற்கும் தலா பத்து இலட்சம் வீதம் நிரந்தர வைப்பில் இடப்பட்டதும், கடந்த எட்டு ஆண்டுகளில் அவற்றின் ஊடாக ஒருகோடிக்கும் மேற்பட்டளவில் வங்கி வட்டியை பாடசாலைகள் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மேலும் 65 இலட்சம் ரூபாய்கள் இலங்கையில் மன்றத்தின் பெயரில் உள்ள ஹட்டன் நாஷனல் வங்கியில் நிரந்தர வைப்பில் உள்ளதும் அதனூடாக மேலும் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்களிற்கு மாதாந்த வருடாந்த உதவிகள் கல்விக்காக வளங்கும் வகையில் வங்கி வட்டி காரைநகர் அபிவிருத்தி சபைக்கு அனுப்பப்பட்டு வருவதும் கடந்த நான்கு நிர்வாக தலைமைகளும் உறுதிசெய்து வந்துள்ளனர்.

கனடா காரை கலாசார மன்றத்தினால் கனடாவில் பல்வேறு செயற்பாடுகள் செயற்படுத்தப்பட்டாலும் காரை மண்ணின் தேவைகளை முன்னிறுத்தி செயற்படுத்தப்படும் ‘காரை வசந்தம்’ நிகழ்வு மூலம் மட்டுமே ஊரிற்கான அனுசரணையினை விளம்பரதாரர்களும், அங்கத்தவர்களும் அனுமதி அன்பளிப்புக்கும் அதிகமாக அனுசரணை அன்பளிப்புக்களாக வளங்கி வந்துள்ளனர்.

‘காரை ஒன்றுகூடல்’, ஆருத்ரா தரிசனம், போன்ற நிகழ்வுகள் ஊடாக இலாபமாக நிதி பெறப்படுவதில்லை என்பதுடன், அவற்றின் போது ஏற்படும் வரவினையும் எஞ்சிய செலவினையும் அங்கத்தவர் சந்தா, மற்றும் ‘காரை வசந்தம்’ மூலம் மட்டுமே சமன் செய்யப்பட்டு வந்துள்ளதும் கடந்த எட்டு ஆண்டு கால மன்றத்தின் கணக்கறிக்கைகள் ஊடாக அறிந்து கொள்ள முடியும்.

கனடா காரை கலாசார மன்றம் கனடாவில் வதியும் காரைநகர் மக்களின் நல்லெண்ணங்களை பெற்ற நிர்வாகங்களிளால் நிர்வகிக்கப்பட்டு கனடாவில் காரை மக்களின் ஒற்றுமையை நிலை நாட்டுவதோடு அதன் மூலம் எமது ஊர் காரை மண் ஓரளவேனும் அதனூடாக பயன்பெறும் என்ற நம்பிக்கையோடு தம்மாலான உதவிகளை வளங்கி வந்துள்ளனர்.

அதுமாத்திரமன்றி காரைநகர் வர்த்தகர்களும், அங்கத்தவர்களும், நிர்வாக சபையில் அங்கம் வகித்தவர்களும் மக்களிடம் ஊரின் பெயரால் பெறப்படும் நிதியின் சில விகிதமேனும் ஊரின் அபிவித்தி மற்றும் கல்வி வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் என்னும் நோக்கில் மன்றத்தின் தலைமை மீதும் நிர்வாகத்தின் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே தேவைக்கும் அதிகமான நிதிகளை செயற்பாடுகளின் போது வளங்கி மன்றத்தின் நிர்வாகங்களை பலப்படுத்தி வந்துள்ளனர்.

நிர்வாக சபையில் அங்கம் வகித்த பலரும் ஊர் பற்றும் ஊரின் வளர்சியிலும் மண்ணின் பெருமையினை வளப்பதிலும் அக்கறையுடன் செயற்பட்டு கடந்த எட்டு ஆண்டுகளில் மன்றத்தின் மொத்த வருவாயில் இருந்து ஐந்தில் ஒரு பகுதியான ஐந்து கோடி ரூபாய்களிற்கு மேற்பட்ட நிதியினை பல்வேறு சிரமங்களிற்கு மத்தியிலும் காரைநகர் அபிவிருத்தி சபையினூடாக காரை மண் பயன்பெறும் வகையில் அனுப்பி வைத்துள்ளனர்.

கனடா காரை கலாசார மன்றத்தின் செயற்பாடுகளை உங்களிற்கு நம்பிக்கை, நாணயம், மனச்சாட்சிக்கு உட்பட்டு எடுத்து வருகின்ற தீசன் திரவியநாதன் ஆகிய நான் கடந்த எட்டு ஆண்டுகளிலும் நிர்வாக சபை உறுப்பினராகவும், எட்டு மாதங்கள் பதில் செயலாளராகவும் கடமையாற்றியதுடன் தொடர்ந்து மன்றத்தின் ஆதரவாளராகவும் செயற்பட்டு வருகிறேன்.

தொடர்ந்தும் மன்றத்தின் நிர்வாக செயற்பாடுகள், நிர்வாக சிக்கல்களிற்கு மத்தியிலும் காரை மண்ணின் பெயரால் கனடாவில் ஒன்றுமையும் அதனூடாக எமது மண் பெறப்போகும் பயனையும் கனடா வாழ் காரை மக்கள் உறுதி செய்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

More From Author

வேலுப்பிள்ளை ஆச்சிமுத்து |மறைவு: 27.05.2014

பிறந்த நாள் விழா-பகுதி 1 – 05.05.2024

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Archive

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Recent Comments

No comments to show.