கனடா காரை கலாசார மன்றத்தின் ‘காரை வசந்தம் 2023’ இன் மூலம் திரு.சிவசம்பு சிவதாதன் தலைமையாலான நிர்வாக சபையினரால் சேர்க்கப்பட நிதி பத்து இலட்சம் ரூபாய்கள் பயனாளிகளிடம் சேர்வதில் தாமதம்..!
Dec 02.2023 அன்று கனடாவில் கனடா காரை கலாசார மன்றம் நடாத்திய ‘காரை வசந்தம் 2023’ நிகழ்வு மூலம் 20,000 டொலர்கள்(45 இலட்சம் ரூபாய்கள்) வரை திரட்டப்பட்டது. அதில் நிகழ்வுக்கான செலவுகள் மற்றும் மன்றத்தின் செயற்பாடுகளிற்காக 15,000 டொலர்கள்(35 இலட்சம் ரூபாய்கள்) வரை கனடாவில் மன்றத்தால் செலவு செய்யப்பட்ட பின்னர் எஞ்சிய நிதியான $ 4500 டொலர்கள்(பத்து இலட்சம் ரூபாய்கள்) காரைநகர் அபிவிருத்தி சபைக்கு திரு.சிவசம்பு சிவநாதன் தலைமையிலான நிர்வாகத்தினரால் அனுப்பப்பட்டது.
10.04.2024 அன்று திரு.சிவசம்பு சிவநாதன் தலைமையிலான நிர்வாகத்தின் நிர்வாக சபைக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு மன்றத்தின் உத்தியோகபூர்வ தீர்மானங்களை நிறைவேற்றி வழமை போன்று காரைநகர் அபிவிருத்தி சபைக்கு அனுப்பப்பட்டது. ஆனாலும் கடந்த இரண்டு மாதங்களிற்கு மேற்பட்ட நிலையில் காரைநகர் அபிவிருத்தி சபையினரால் அதனை உரிய முறையில் பயனாளிகளிடம் சேர்ப்பிப்பதில் தேவையற்ற பிடிவாதங்கள் ஏற்பட்டுள்ளதாக சில கடித பரிமாற்றங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
‘காரை வசந்தம்’ கனடாவில் நடைபெற்றாலும் ஊரிற்காக மண்ணிற்காக மக்களுற்காக என்று மக்கள் வளங்கிய நிதியின் ஒரு பகுதி ஊரிற்கு பலவித போராட்டங்களிற்கு பின்னர் சென்றுள்ள போதிலும் ‘கடவுள் வரங்கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுக்கமாட்டார்’ என்பது போல காரைநகர் அபிவிருத்தி சபையில் சிலர் பத்து இலட்சம் ரூபாவை வைத்து இரண்டு மாதகாலமாக ‘அரசியல்’ செய்ய பார்க்கிறார்கள் என்பதே நிதர்சனம்.
எல்லாம் தெளிவாக உள்ள நிலையில் பாடுபட்டு சேர்த்த பணம் பயனாளிகளை சென்றடையும் என்பதில் கனடா காரை கலாசார மன்றத்தை விட நான் திடமாக நம்புகிறேன்.
திரு.சிவசம்பு சிவநாதன் தலைமையிலான நிர்வாக சபையின் வரவு செலவு அறிக்கையினை 28.04.2024 க்கு பின்னர் மன்றத்தை பொறுப்பேற்றுக்கொண்டவர்கள் உரிய முறையில் பெற்றுக்கொள்ள தவறியுள்ள காரணத்தினால் இன்னமும் வெளியாகாத அந்த அறிக்கை கனடிய நீதிமன்ற மேற்பார்வையில் உரியவர்களிடம் தலைவர் திரு. சிவசம்பு சிவநாதன் அவர்களின் முற்றும் முழுதான சத்தியகடதாசியுடன் வெகுவிரைவில் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன் அதன் பின்னர் அவ்வறிக்கை அனைவரது பார்வைக்கும் ‘எனது ஊர் காரைநகர்’ மேலதிக விளக்கத்துடன் எடுத்து வரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.



