நல்லதை செய்யவும் செயற்படுத்தவும் தேர்தல் அரசியலில் தான் இறங்க வேண்டிய அவசியம் இல்லை. நம்மாலான செயற்பாடுகளை நாம் ஆற்றிக்கொண்டு இருந்தால் சமுதாயம் நிச்சயமாக அங்கீகரிக்கும். கற்பனையிலும், ஊகத்திலும் கதை கட்டுவதாலோ அல்லது இன்னொருவர் வெற்றியை தடுப்பதாலோ அல்ல. அரசியலுக்கு வந்தால் தான் மக்களிற்கான பணிகளை செய்ய முடியும் என்று நம்பியது இல்லை. என்னிடம் 100 ரூபா இருந்தால் எப்போதும் 25 ரூபாவை இன்னொருவருக்கு தானமாக, தர்மமாக, உதவியாக வழங்க ஒருபோதும் தயங்குவதில்லை.
24.01.2025 அன்று காரைநகர் இந்துக்கல்லூரியில் நடைபெற்ற தேசிய மட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கான கெளரவத்தின் போது 1973 பொன்னகவை மாணவர்களால் அனுசரணை வளங்கப்பட்ட காரணத்தினால் விருந்தினர்களில் ஒருவராக அழைக்கப்பட்டிருந்தேன். அதன்போது பாடசாலைக்கான cafeteria வும் கட்டிக்கொடுக்க உறுதி வழங்கப்பட்டது.



