வேரப்பிட்டி கல்லந்தாழ்வை சேர்ந்த குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி தேவைப்படுகின்றது. |2021

காரைநகர் வேரப்பிட்டி கல்லந்தாழ்வை சேர்ந்த மூன்று குழந்தைகளை உடைய பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி தேவைப்படுகின்றது. பாடசாலைக்கு செல்லும் மூன்று பிள்ளைகளை உடைய குடும்ப தலைவர் திரு.தர்சன் கடந்த மூன்று ஆண்டுகளிற்கு முன்னர் பனைமரத்தில் இருந்து விழுந்த காரணத்தினால் முள்ளந்தண்டு பாதிப்படைந்த நிலையில் மேற்கொண்டு தொழில் செய்ய முடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றார்.

அவருடைய மனைவியே கூலி தொழில் செய்து குடும்பத்தை பராமரித்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களிற்கு முன்னர் இவர்ளுடைய நிலமையினை ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளத்திற்கு அன்பர் ஒருவர் தெரியப்படுத்தியிருந்தார். உடனடியாக காரைநகர் சுகாதார உத்தியோகத்தர் மற்றும் வியாவில் பாடசாலை ஆசிரியர் ஒருவருடன் தொடர்பு கொண்டு மேற்படி குடும்பத்தின் நிலமைகளை உறுதிப்படுத்திக்கொண்டதன் பின்னர் அடிப்படை தேவை கருதி உடனடியாக 26.10.2021 அன்று குடிநீர் பெற்றுக்கொள்ள 20,000 ரூபா பெறுமதியுள்ள 1000 லீட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் பரல் ஒன்றும் 30,000 ரூபா பணமும் வழங்கப்பட்டது.

இந்த நிதியினை மலேசிய முன்னாள் உறவான சரஸ்வதி அம்மா அவர்கள் முன்வந்து வழங்கியிருந்தார். மேற்படி குடும்பத்திற்கு அண்மையில் வீட்டு திட்டத்தின் மூலம் வீடு வழங்கப்பட்ட போதிலும் அதனை முதற்கட்டமாக முன்னெடுத்து செல்ல நிதி இல்லாமை காரணமாக வீட்டு திட்ட வேலைகள் தாமதமாகியுள்ளது. இந்த நிலைமையினை கருத்தில் கொண்டும் பாடசாலைக்கு செல்லும் மூன்று பிள்ளைகளின் நிலமையினை கருத்தில் கொண்டும் தொடர்ந்து மேற்படி குடும்பத்திற்கு மேலும் நிதி உதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளம் ஊடாக மேற்படி குடும்பத்தின் நிலமைகளை தெரியப்படுத்தி தமக்கு வீட்டு திட்டத்தை ஆரம்பிக்க முதல் கட்டமாக இரண்டு இலட்சம் ரூபாய்களை பெற்றுத்தரவும் அதனை தமது படத்துடன் தெரியப்படுத்தவும் அனுமதி வழங்கியுள்ளார்கள்.

வெளிநாடுகளில் வதியும் காரைநகர் மக்கள் எங்கிருந்தாலும் இவர்களிற்கு உதவிகளை உடனடியாக செய்வதற்கு நேரடியாக ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளத்தினையோ அன்றி இக்குடும்பத்திற்கான உதவிகளை பெற்று வழங்க முன்வந்துள்ள வியாவில் பாடசாலை ஆசிரியரையோ தொடர்பு கொள்ள முடியும். வீட்டு திட்டத்தினை மேற்படி குடும்பம் பெற்றுக்கொண்டுள்ள நிலையிலும் மலசல கூட வசதி அற்ற நிலையிலும் வீட்டு வளவிற்குள் கிணறு இருந்தும் ஆபத்தான நிலையில் இருப்பதால் இவற்றினையும் முறையே அமைத்துக் கொடுக்கவும் மேலதிக நிதி தேவைப்படுவதாலும் காரைநகர் சுகாதார உத்தியோகத்தர் மேற்பார்வையில் இவற்றினையும் சரி செய்து கொடுக்கவும் தாங்கள் வழங்கும் நிதி உதவிகள் மேற்படி குடும்பத்திற்கு முழுமையாக நேரடியாக சென்றடையவும் ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளம் உறுதி செய்து கொள்ளும். சிறு துளி பெரு வெள்ளம். உங்கள் உதவி 50 டொலராக இருந்தாலும் 500 டொலராக இருந்தாலும் மேற்படி குடும்பத்தை சென்றடைய ‘எனது ஊர் காரைநகர்’ உறுதுணையாக இருக்கும். நன்றி!

More From Author

கோவிட் இடர்கால கொடுப்பனவு – தற்காலிகமாக வேலையிழந்த மூவருக்கு ‘எனது ஊர் காரைநகர்’ உதவி |2021

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக திரு.மயிலன் அப்புத்துரை அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். |2021

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Archive

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Recent Comments

No comments to show.