நாள் : Sunday, August 16, 2026
--:--:--
👁️
Building

அரசாங்கம் ஆயிரம் செய்யட்டும், நாம் ஊரவர்கள் ஒரு குடும்பத்தை வாழ வைப்போம்..!

அரசாங்கம் ஆயிரம் செய்யட்டும், நாம் ஊரவர்கள் ஒரு குடும்பத்தை வாழ வைப்போம்..!

காரைநகர் வியாவில் பகுதி பெரியடைப்பை சேர்ந்த இரண்டு பிள்ளைகளை உடைய குடும்பம் ஒன்று கடந்த பத்து ஆண்டுகளாக வீட்டுத்திட்டத்திற்கு காத்திருந்து ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில் தம்கையே தமக்கு உதவியாகவும் ஊரிற்கும் மக்களிற்கும் விசுவாசமாக இருக்கிறோம், கூலித்தொழில் செய்து பிழைத்து வருகிறோம் என்றும் ஊரவர்கள் இணைந்து தங்களுக்கொரு வாழ்விடம் அமைத்து தருமாறு கடந்த வருடம் முதல் ‘எனது ஊர் காரைநகர்’ மூலமாக கேட்டுள்ளார்கள்.

12 வயது மற்றும் ஒரு வயது நிரம்பாத பிள்ளைகளை உடைய இக்குடும்பம் தமது சொந்த சேமிப்பு மூலம் தங்களால் 10 இலட்சம் ரூபாய்கள் வரை மட்டுமே செலவு செய்ய முடியும் எனவும் கடந்த பத்து ஆண்டுகளாக சொந்த வீட்டுக்கான கனவுகளுடன் அவற்றை சேமித்து வந்துள்ளதாகவும், ஆனால் குறைந்த பட்சம் முழுமையான ஒரு வீட்டை கட்டி முடிப்பதற்கு 25 இலட்சம் ரூபாய்கள் வரை அதற்குரிய ஒவ்வொரு பகுதி செலவுகளிற்கும் உத்தேச மதிப்பீடு எடுத்து வைத்துள்ளார்கள்.

இக்குடும்பமானது தமது சொந்த பெயர், விபரம், படங்களுடன் இவ்வறிவித்தலை பகிர்ந்து கொண்டு தமக்கான உதவியை பெற்றுத்தருமாறு கடந்த வருடம் முதல் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் காரைநகர் அபிவிருத்தி சபையானது தனித்து தாமாக இக்குடும்பத்திற்கு மட்டும் உதவும் வகையில் தீர்மானிப்பது நிர்வாக சிக்கலாக உள்ள நிலையில் ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக இக்குடும்பத்திற்கென சேகரிக்கப்பட்டு வழங்கப்படும் நிதி உதவியினை ‘காரைநகர் அபிவிருத்தி சபை’ ஊடாக வழங்கவும் அதனை காரைநகர் அபிவிருத்தி சபை செயற்படுத்தவும் தயாராக உள்ளது.

எனவே சொந்த முயற்சியாலும், வீட்டுக்கான கனவுகளுடனும், பிள்ளைகளது எதிர்கால கல்விச்செயற்பாடுகளை கருத்தில் கொண்டும் இக்குடும்பமானது வெளிப்படையாக ஊர் மக்களிடம் இருந்து இவ்வுதவியை எதிர்பார்க்கிறார்கள்.

‘எனது ஊர் காரைநகர்’ நம்பிக்கை தன்மை கருதியும் கூட இக்குடும்பத்தின் புகைப்படங்களை பிரசுரிப்பதில் தயக்கம் காட்டினாலும், தாம் ஊர் மக்களிற்கு விசுவாசமாக இருக்கிறோம், அரசின் வீட்டுத்திட்டங்கள் கைவிட்ட நிலையில் உண்மையாகவே வீட்டுக்கான உதவியையே கேட்கிறோம் எனவும் தங்களது முழு விபரமும் படங்களும் போடுவதில் தமக்கு எந்தளவிலும் சிரமம் இல்லை எனவும் தெரிவித்துள்ளதுடன் விபரமாக எழுத்து மூலமாக அறியப்படுத்தியும் உள்ளார்கள்.

அவர்களுடைய கடித த்தினை வாசிப்பதன் மூலமாக மிகுதி விடயங்களை அறிந்து கொள்ளுங்கள்.

‘எனது ஊர் காரைநகர்’ இக்குடும்பத்திற்கான உதவியை பெற்று ‘காரைநகர் அபிவிருத்தி சபை’ ஊடாக வழங்கவும் தீர்மானித்துள்ளது. மேற்கொண்டு வேறும் சில அமைப்புகள் உதவிகளை வழங்க முன்வந்துள்ளனர், அத்துடன் ‘எனது ஊர் காரைநகர்’ அல்லது மேலும் தனிப்பட்ட அமைப்புகள் ஊடாக 9 இலட்சம் ரூபாய்கள் தேவை என எதிர்பார்துள்ளார்கள்.

‘எனது ஊர் காரைநகர்’ மற்றும் சில ஊர் அமைப்புக்கள், தனி நபர்கள் ஆதரவுடனும் ‘ஆரம்பியுங்கள் வீட்டை கட்டித்தருவோம்’ என்று கொடுத்த வாக்கிற்கு இணங்க 21.01.2026 இன்று வீட்டுக்கான அத்திவாரம் இட்டுள்ளனர்.

அரசாங்கம் ஆயிரம் செய்யட்டும் நாம் ஊரவர்கள் இந்த ஒன்றை நிறைவேற்றி எமது நல்லாதரவையும் நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்துவோம்.

தங்களது உதவிகள் அனைத்தும் ‘காரைநகர் அபிவிருத்தி சபை’ ஊடாக தங்களது பெயரிலேயே வழங்கப்பட்டு காரைநகர் அபிவிருத்தி சபை ரசீது வழங்கப்படும். வருட முடிவில் காரைநகர் அபிவிருத்தி சபை கணக்கறிக்கையிலும் மொத்தமாக இவ்வுதவிக்காக வழங்கப்படும் நிதி தொடர்பான கணக்குகள் பிரதிபலிக்கும்.

வெளிநாடுகளில் வதியும் ஊரவர்கள் மட்டுமன்றி தங்களது நல்லாதரவை ஒற்றுமையை எடுத்தியம்ப ஊரில் வாழும் ஊரவர்களும் சிறு தொகையானாலும் வழங்கி தங்களது நல்லாதரவை தெரியப்படுத்துங்கள். குற்றம் சொல்வதிலும் குறை காண்பதிலும் விமர்சிப்பதோடு மட்டும் நின்று விடாதீர்கள். செயற்பாடுகள் மட்டுமே பயனுள்ளவையாக அமையும். நன்றி.

(இவர்களிற்கான வீடு அமையும் வரை தொடர்ந்து இது தொடர்பான உதவிகள் update செய்யப்படும்)

1. தீசன் திரவியநாதன் – 50,000 Rs.

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.

11.

12.

13.

14.

15.

16.

17.

18.

19.

20.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் மகோற்சவ தேர்த்திருவிழா 11.08.2026 இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இலங்கையில் ஆடி அமாவாசை 12.08.2026 புதன்கிழமை என்பதும் அன்றைய தினம் வியாவில் தீர்த்தோற்சவம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் மகோற்சவ தேர்த்திருவிழா 11.08.2026 இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இலங்கையில் ஆடி அமாவாசை 12.08.2026...

கனடா ரொறன்ரோ மாநகரின் ஸ்காபுரோ பகுதியில் சொந்தமாக கோயில் கொண்டு விளங்கும் கனடா கந்தசுவாமி ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா. 10.08.2026 திங்கள்கிழமை. நாளை செவ்வாய்கிழமை ஆடி அமாவாசை தினத்து தீர்த்தோற்சவமாகக் கொண்டு நடைபெறும் ரதோற்சவம்.

கனடா ரொறன்ரோ மாநகரின் ஸ்காபுரோ பகுதியில் சொந்தமாக கோயில் கொண்டு விளங்கும் கனடா கந்தசுவாமி ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா....

‘காரைநகர் சேவையாளர் கெளரவம் 2026’ – ‘எனது ஊர் காரைநகர்’ karainews.com நடாத்தும் ஐந்தாவது சேவையாளர் கெளரவம் தொடர்பான அறிவித்தல்.

‘காரைநகர் சேவையாளர் கெளரவம் 2026’ ‘எனது ஊர் காரைநகர்’ karainews.com நடாத்தும் ஐந்தாவது சேவையாளர் கெளரவம் தொடர்பான அறிவித்தல்....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605