பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லத்துரை அம்மா…!
செல்லத்துரை அம்மாவை சிறிய வயதில் இருந்தே பழையகண்டியில் இருந்த தண்ணி பைப்படியில் இருந்து அறிந்து கொண்டவகையில் ஊர் மக்களுடன் ஒன்றாக கலந்து வாழ்வியலை கண்டு சந்தோசமாக வாழ்கின்ற நல்ல உள்ளம். ‘எனது ஊர் காரைநகர்’ செய்திகளையும் ஊர்ப்பணிகளையும் கண்டு கொண்டு தொடர்பு கொண்டு நல்லது கெட்டவைகளை உரிமையுடன் சொல்லுகின்ற நல்லதொரு தாய் உள்ளம்.
உங்கள் குடும்பம் ஒரு பல்கலைக்கழகம். உங்கள் பிறந்தநாளில் உங்களை வாழ்த்துவதில் பெருமை கொள்கின்றேன். நல்லுள்ளம் கொண்ட உங்கள் வாழ்க்கையின் ஊடாக நன்மக்களை பெற்றுள்ளீர்கள். ஊரோடும் உறவோடும் என்றும் மறவாத அன்போடு வாழும் வாழ்க்கை இடம் பெயர்ந்த பல முதியவர்களிற்கும் உதாரணமாக விளங்குகின்றது. மருதடி வீரகத்தி விநாயகர் அருளோடு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தின் போது சந்திப்போம்.
அதுவரை உங்கள் ஆசியை வேண்டி நிற்கும்
உங்கள் அன்புக்குரியவன்:
தீசன் திரவியநாதன்





Leave a Reply
You must be logged in to post a comment.