நான் அரசியலில் இறங்கவில்லை..! (முழுமையாக வாசித்து விளங்கிக்கொண்டால் மட்டும் புரியும்).

நான் அரசியலில் இறங்கவில்லை..! (முழுமையாக வாசித்து விளங்கிக்கொண்டால் மட்டும் புரியும்).

ஆனால்….. எனது ஊரும், எனது கிராமமும், எனது வட்டாரமும் அபிவிருத்தி அடைய வேண்டும். அதற்காக அரசியல் அல்லாத வகையில், ஊர் அபிவிருத்தியிலும் மக்கள் நலனிலும் அக்கறையுடன் செயற்பட்டு காரை மக்களிற்கான தமது சேவையினை கடந்த காலங்களில் நிரூபித்தவர்களை காரைநகர் பிரதேச சபை தேர்தலில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

எனது வட்டாரம் J/47, இங்கே தான் திண்ணபுர சிவன்கோயிலும், தீர்த்தமாடும் கசூரினா கடற்கரையும் அமைந்துள்ளது. காரைநகர் பிரதேச சபைக்கு இன்று அதிக வருமானத்தை ஈட்டித்தருவது கசூரினா கடற்கரை அது மட்டுமன்றி மார்கழி திருவாதிரை உற்சவம் நடைபெற்றால் ஊரிற்கே அதிக வருமானம் ஈட்டித்தருவது திண்ணபுரம் சிவன்கோயில். அந்த வகையில் இந்த மண்ணையும் இந்த மண்ணின் நிர்வாகங்களையும், இந்த மண்ணின் அபிவிருத்திகளிற்காகவும் கடந்த காலங்களில் தமது திட்டங்களையும் செயற்பாடுகளையும் வெளிப்படுத்தியதுடன், கட்சி அரசியல்களிற்கு அப்பால் பிரதேச சபை ஊடான ஊர் அபிவிருத்தியில் எந்த கட்சியில் நின்றாலும் அவர்களை வெற்றிபெற வைத்த காரைநகர் மக்கள் அதற்கு பெரும் சான்றாவார்கள்.

J/47 பிரதேசத்தை சேர்ந்த சான்றோர்கள் திண்ணபுர சிவனையும், தீர்த்தமாடும் கசூரினா கடலையும் என்றும் எப்போதும் உயிரினும் மேலானதாக கருதுபவர்கள்.

திண்ணபுர சிவனின் திருவிளையாடல்களில் தன்னை அர்ப்பணித்து கேடிக்கு கேடியாகவும் தன்னை நம்பியவர்களிற்கு ஆபத்பாண்டவராகவும் சாதி, மத, சமயம் பாராது தோழோடு தோள் நின்று உழைத்து வரும் K.K.சுப்பிரமணியம் குருபரன் தன்னை பிரதேச சபை தேர்தல் ஊடாக திரு. கணேசபிள்ளை பாலச்சந்திரன் அணியுடன் இணைந்துள்ளார்.

திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் அவர்கள் தனது ஊர்ப்பணி, மக்கள் நலன், எதிர்கால வளர்ச்சி கருதிய திட்டங்களை முன்னேற்பாடக திட்டமிட்டு செயற்படுத்தி காரை மக்கள் நலனையே மூச்சாக கொண்டு வாழ்பவர்.

கனடாவில் வதிவுரிமை பெற்று, தொழில்புரிய தகமைகள் பெற்று, தொழில் புரிந்து தனது சுயத்தை சுயமாக பெற்றிருந்தாலும் பொது நலனையே முதன்மையாக கொண்டு கனடிய வாழ்வை துறந்து சொந்த ஊரில் சொந்தமாக வாழ்பவர். கட்சி அரசியல்களிற்கு அப்பால் காரைநகர் மக்களிற்கும் மண்ணிற்கும் நல்லனவற்றை செய்ய கட்சிகளிற்கு அப்பால்பட்டு எந்த கட்சியில் வேட்பாளராக நின்றாலும் ஊர்ப்பணிகளிற்காக ஊர்மக்களால் என்றும் எப்போதும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பவர்கள் காரைநகர் மக்கள்.

அந்தவகையில் திரு. கணேசபிள்ளை பாலச்சந்திரன் அவர்களது தலைமையில் அமைந்த அணியானது ஊரிற்கும் மண்ணிற்கும் மக்களிற்கும் அபிவிருத்தியை கொடுக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

தீசன் திரவியநாதன் ஆகிய நான் கனடாவில் வாழ்ந்தாலும் 2009 க்கு பிற்பட்ட வகையில் இலங்கை அரசியலில் ஊர் அபிவிருத்தியில் மட்டும் கவனம் செலுத்தி வருவதால், சிங்கம், புலி, யானை மற்றும் உள் வீட்டு அரசியலுக்கு அப்பால்பட்டு உள்ளூராட்சி தேர்தலில் ஊர் அபிவிருத்தியும், என் வீதி அபிவிருத்தியும், என் வட்டார அபிவிருத்தியுமே சாத்தியமானது என்பதால்,

50 வருடமாக மாரி காலத்தில் வெள்ளத்தால் மூன்று மாத காலத்திற்கு தடைப்பட்டிருக்கும் நீலிப்பந்தனை – புதுறோட், நீலிப்பந்தனை – மருதடி வீதிகளை புனரமைக்க பிரதேச சபையும், J/47 வட்டார பிரதிநிதியும், பிரதேச சபை தவிசாளராக வருபவரும் மட்டுமே பொறுப்பாளர்கள் ஆவார்கள்.

நீலிப்பந்தனை, நடுத்தெரு, புதுறோட், மருதடி, பெரியமணல், சடையாளி, சிவன்கோயிலடி, மாப்பாணவூரி, மல்லிகை ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்களின் 50 வருட கனவு நிறைவேற வேண்டுமாயின் திருமதி தவமணி பரமானந்தம், மற்றும் திரு. நடராசா சாந்தகுமார் அவர்களையும் அவர்களது கூட்டணியினரையும் ஆதரித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.

‘எனது ஊர் காரைநகர்’ www.karainews.com என்றும் ஒருபோதும் அரசியலில் இறங்கியது இல்லை, இறங்க போவதும் இல்லை. இது உள்ளூராட்சி, பிரதேச சபை, ஊர் அபிவிருத்திக்கான ஊரையும், மண்ணையும், மக்களையும் நன்கு அறிந்து மக்களிற்கான சேவை செய்பவர்களை தெரிவு செய்கின்ற தேர்தல் ஆகும்.

இனிமேல் தான் அரசியல் கட்சிகளிற்காக தம்மை ஊரிற்காக பணி செய்பவர்களாக கட்சிகளிட்கான வேட்பாளர்களாக களம் இறங்குபவர்களிற்கான களம் பிரதேச சபை தேர்தல் களம் அல்ல. அவர்கள் ஊரிற்கான, மண்ணிற்கான, மக்களிற்கான பணிகளை செய்யட்டும் தமது செயலை, திட்டங்களை, அபிவிருத்திகளை மக்களிடையே நிரூபிக்கட்டும். ஆறு மாத்த்திற்கு முன்னர் அவர்களிற்கே தாம் யார் என்று தெரியாதவர்களால் ஊரிலே எந்த அபிவிருத்தியையும் இனம் கண்டுவிட முடியாது.

பொன்னாலைக்கு அப்பால் ஒருவேளை அவர்களது அரசியல் இன்னும் இரண்டு வருட காலத்தில் சாத்தியமாகலாம். எங்களிற்கு தேவை அடுத்த மாரியில் சக்கலாவோடையில் கன்கிறீட் றோட், திண்ணபுர சிவனின் குடமுழுக்கு, நீலிப்பந்தனை தச்சவெட்டையில் ஜனவரியில் ஒன்றுகூடல்.

திரு. கணேசபிள்ளை பாலச்சந்திரன் அவர்களை முதன்மை வேட்பாளராக கொண்டு களம் இறங்கும் வேட்பாளர்கள் பலருடன் இணைந்து ‘எனது ஊர் காரைநகர்’ www.karainews.com கடந்த காலங்களில் பலவித செயற்பாடுகளை நிறைவேற்றி வெற்றிபெற வைத்துள்ளது. அண்மையில் நீலங்காடு கடற்றொழிலாளர் சங்கத்திற்கு கட்டுமர கொள்வனவிற்காக கடனடிப்படையில் வழங்கப்பட்ட நிதி, வேரப்பிட்டி, தோப்புக்காடு, ஊரி ஆகிய பகுதிகளில் வீட்டுத்திட்டங்களை நிறைவேற்ற திரு. குருபரன் சுப்பிரமணியம் அவர்களது வேண்டுகோளின் பெயரில் நிறைவேற்றப்பட்ட பலவித திட்டங்கள் என்பனவும் இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிடத்தக்கவை.

இவை அனைத்திற்கும் அப்பால், காரைநகர் மக்களிற்கு உரிமையுடனும் உணர்வுடனும், உண்மையோடும் அள்ளி வழங்கக்கூடியவர்கள் வெளிநாடுகளில் வாழும் காரை மக்களே. கடந்த 15 ஆண்டுகளில் அவர்கள் செய்தவை அனைத்தும் காரைநகர் அபிவிருத்தி சபை எனப்படும் மாபெரும் சபை ஊடாகவே…. இன்று அதிரடியாக முளைத்த எத்தனை வேட்பாளர்கள் கடந்த 15 ஆண்டுகளில் காரைநகர் அபிவிருத்தி சபை அங்கத்தவர்களாக அல்லது மக்களிற்கு பொதுப்பணி செய்ய நிர்வாக சபையில் அங்கத்தவர்களாக சேவை புரிந்தார்கள்…! என ஒரு கணம் சிந்திப்பீர்களேயானால் , தென்னிலங்கை கட்சிகளிற்காகவும், தமது சுயநலன்களிற்காகவும் காரைநகர் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுபவர்களை இலகுவாக வெளியேற்றிவிடலாம்.

பிரதேச சபை தேர்தலில் யாருக்கு வேட்டு போட வேண்டும் என உங்களிற்கு தெரியவில்லையா..? கீழே கொஞ்சபேரின் படங்கள் போடுகின்றேன். இவர்களில் உங்களிற்கு தெரிந்த ஒருவர், கடந்த காலங்களில் உங்களிற்கு ஏதோ ஒருவகையில் உதவியிருப்பார்.

உங்களிற்கு நட்பாகவிருப்பார். அவரின் பக்கத்து வீட்டு எல்லையில் உள்ளவர் அவரிற்கு வோட்டு போடுவார். உங்களிற்கு நன்மையே மட்டும் செய்திருப்பார்.

அவரை கடந்த ஐந்து வருடங்களிற்கு மேலாக நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

தெரியாதவர்களிற்காக ஒருபோதும் உங்கள் வோட்டுக்களை வழங்காதீர்கள். அவர்கள் கட்சிக்காக, இனத்திற்காக, மதத்திற்காக, பணத்திற்காக வேலை செய்பவர்களாக இருக்கலாம். அதிகபட்சம் தலா 1700 வாக்காளர்களை கொண்ட காரைநகரின் ஆறு வட்டாரங்களை கொண்ட காரைநகரில் கடந்த ஒரு வருடத்தில் உங்களை தனிப்பட்ட வகையில் யார் என்று தெரியாத ஒருவரிற்கு கண்டிப்பாக உங்கள் வாக்கை கட்சிக்காகவென வழங்கி வீணடித்து விடாதீர்கள்.

இது ஊர் அபிவிருத்திக்காக மண் மீதும், மக்கள் மீதும், தாய் மீதும் அக்கறை உள்ள ஒருவரை தெரிவு செய்து உங்களை நீங்களே அபிவிருத்தி செய்ய தகுதியானவரை தெரிவு செய்கின்ற தேர்தல்.

சிங்கத்திற்கும் புலிக்கும், யானைக்கும் பூனைக்கும் எதிராக நடைபெறுகின்ற போட்டி அல்ல. ஊரையும் மண்ணையும் மக்களையும் மேம்படுத்த ஓடுகின்ற ஒரு மாதிரியான ஓட்டம், அது தான் மான் ஓட்டம். சிங்கமும் புலியும் அதன் இரைக்கான தேவைக்காக ஓடும் போது தனக்காக ஓடுகின்ற மானின் ஓட்டம் எங்கள் ஊரின் அபிவிருத்தியை நாமே கையில் எடுக்க எங்களிற்கான ஓட்டம் தான் மான் ஓட்டம்.

மான் ஓட்டம் வெற்றி பெறும், காரணம் தனக்கான ஓட்டத்தில் தங்களை தங்கள் ஊரில் தக்க வைத்துக்கொள்ள காரைநகர் மக்கள் தங்கள் வட்டாரத்தில் மான் சின்னத்தில் வேட்பாளராக உள்ள ஒருவரிற்கே தமது வாக்குகளை போட்டு வெற்றி பெறசெய்ய வேண்டியது 2025இல் காரைநகரில் மக்களது கடமையாகும்.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

அந்த நாள் ஞாபகம் வந்ததே…! 1995 – 2000 வரை Ottawa Carleton University இல் சேர்ந்த நண்பர் ராஜ்மோகன் 50வது பொன்னகவை பிறந்த நாள்

காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் ஆலய மாதாந்த நித்திய பூசை முன்னேற்பாடு பற்றிய அறிவித்தல்.!

Leave a Reply