‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளம் ஊடாக மலேசியா வாழ் காரை உறவு சரஸ்வதி அம்மாவின் அனுசரணையுடன் இடர்கால கொடுப்பனவாக இரண்டாம் கட்டமாக மேலும் 30 வருமானமற்ற குடும்பங்களிற்கு 5,000 ரூபா வீதம் வழங்கப்பட்டது.
27.09.2021 அன்று சுகாதார உத்தியோகத்தர் உதவியுடன் இனம் காணப்பட்ட பெண்களை தலைமைத்துவமாக கொண்ட கற்பிணி தாய்மார்கள், நிரந்தர வருமானமற்ற கூலி தொழில் மேற்கொள்ளும் குடும்பங்கள் என இனம் காணப்பட்ட 25 குடும்பங்களிற்கும், மேலும் இணையத்தள வாசகர்களால் இனம் காணப்பட்ட 5 குடும்பங்களென 30 குடும்பங்களிற்கு நேரடியாக இவ்வுதவி வழங்கப்பட்டன.









பொது இடம் ஒன்றில் மேற்படி இனம் காணப்பட்டவர்கள் வரவழைக்கப்பட்டு வழங்கப்பட்டதுடன், மேலும் பொது இடத்திற்கு வரமுடியாதவர்களிற்கு நேரடியாக வீடுகளிற்கும் சென்று வழங்கப்பட்டன. மேலும் அம்மாவின் விருப்பத்திற்கிணங்க செல்வச்சந்நிதி ஆலய அன்னதான பணிக்காக 50,000 ரூபாய்களும் வழங்கப்பட்டன.
நிதி உதவியை பெற்றுக்கொண்ட அனைவரிடம் இருந்தும் தனித்தனியாக பெற்றுக்கொண்ட நிதிக்கான விபரம் மற்றும் நன்றியறிதலை வீடியோ வாயிலாக பதிவு செய்து நிதியுதவியளித்த மலேசியா வாழ் உறவான சரஸ்வதி அம்மா அவர்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. வீடியோ வாயிலாக பார்த்தறிந்த அம்மையார் மூன்று பிள்ளைகளிற்கு மேற்பட்ட பாடசாலை செல்லும் வயதுடைய மூன்று குடும்பங்களின் நிரந்தர வருமானமற்ற நிலமையினை அறிந்து இடர்கால கொடுப்பனவாக தொடர்ந்தும் மூன்று மாதங்களிற்கு தொடர்ச்சியாக இடர்கால கொடுப்பனவை வழங்க முன்வந்துள்ளார்.



