கலாநிதி விளையாட்டுக்கழகம் காரைநகர் இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தை தளமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று 80க்கும் மேற்பட்ட இளைஞர்களை அங்கத்தவராக கொண்டு இயங்கி வருகின்றது.





இளைஞர்களிற்கான விளையாட்டு பயிற்சியுடன் கூடிய கழகமாக ஆரம்பிக்கப்பட்டாலும் காரைநகரில் பொதுப்பணி மற்றும் சிரமதானப்பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்விளையாட்டு கழகத்தில் அங்கத்தவர்களாக உள்ள இளைஞர்களின் முயற்சியினாலும் ஆர்வத்தினாலும் இவ்விளையாட்டு கழகத்திற்கென ஒரு விளையாட்டு மைதானத்திற்கான காணி மொந்திபுலம் வீதியில் வேண்டப்பட்டு, விஜகலா மகேஸ்வரன் அவர்களின் முயற்சியினால் கம்பரெலிய திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 25 இலட்சம் ரூபா செலவில் விளையாட்டு கழகத்திற்கான கட்டிடமும் அமைக்கப்பட்டது.
கலாநிதி விளையாட்டு கழகத்தினரின் தொடர்ச்சியான முயச்சியினாலும் விளையாட்டு பயிற்சியுடன் மட்டும் நின்றுவிடாது பொதுப்பணி சிரமதானம் என்பவற்றில் அக்கறையுடன் கடந்த காலங்களில் செயற்பட்டு வருவதனாலும் கலாநிதி விளையாட்டுக்கழகத்தின் வளர்ச்சி காரைநகர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதாக இருந்துள்ளது.




கடந்த மாதம் இலண்டனில் வியாபார நிலையங்களின் உரிமையாளராக விளங்கி வரும் திரு. இந்திரன் நாகலிங்கம் அவர்களுடைய நிதி வளங்கலில் 5 இலட்சம் ரூபா செலவில் கரப்பந்தாட்ட மைதானத்திற்கு மின்விளக்குகள் பொருத்தப்பட்டதுடன் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியும் நடாத்தப்பட்டது.
கடந்த மாதம் காரைநகர் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் கூட்டத்தில் கலந்து கொண்ட யாழ் மாவட்ட பராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான திரு.அங்கஜன் இராமநாதன் அவர்களினால் கலாநிதி விளையாட்டுக்கழகம் முன்வைத்த 15 இலட்சம் ரூபாய்கள் கலாநிதி விளையாட்டுக் கழகத்தின் ஊடாக வழங்கப்படுள்ளது.
02.03.2021 நாளை அதற்கான செயற்பாட்டினை ஆரம்பித்து வைக்கவும் அடிக்கல் நாட்டவும் திரு.அங்கஜன் இராமநாதன் அவர்கள் கலாநிதி விளையாட்டுக்கழகத்தின் அழைப்பினை ஏற்று வருகை தரவள்ளதாக அறியப்படுகின்றது.
கலாநிதி விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டுடன் கூடிய பொதுப்பணி, சிரமதானம் மூலம் மேலும் சிறந்து விளங்கவும் காரைநகர் மக்களிடையே மீண்டும் சமூக நலன் பொதுப்பணியினை இன்றைய இளைஞர்களிடையே விரிவுபடுத்தவும் ஏற்படுத்தும் முயற்சிகள் வெற்றிபெறவும் ‘எனது ஊர் காரைநகர்’ சார்பில் வாழ்த்துகின்றோம்.



