நாள் : Sunday, August 16, 2026
--:--:--
👁️
Community service

காரை இந்து மைதானத்தில் நிழல் தரும் மரங்கள் நாட்டப்பட்டன! |04.04.2022

காரைநகர் இந்துக்கல்லூரி மைதானத்தில் நிழல் தரும் மரங்கள் 12 நாட்டப்பட்டன. காரை இந்துவில் கல்விகற்று 1989ம் ஆண்டு க.பொ.த.சாதாரணதர பரீட்சை எழுதிய மாணவர்கள் சார்பாக இந்த நிழல் தரும் மரங்கள் நாட்டப்பட்டன.

நன்கு வளர்ந்த இம்மரங்கள் மைதானத்தின் கிழக்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் ஆழமான கிடங்குகள் வெட்டப்பட்டு சேதன பசளை, செம்மண் மற்றும் இயற்கை உரங்கள் இடப்பட்டு 04.04.2022 அன்று நாட்டப்பட்டன. கடந்த இரண்டு வருட காலமாக இதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகளின் பயனாக இச்செயற்பாடு பயனளித்துள்ளது.

பாடசாலை மைதானத்தை சுற்றிவர உள்ள சுவர்கள் மீளகட்டுப்பட வேண்டிய நிலை உள்ள நிலையில் அதனை காரணமாக கொண்டு இந்த மரநடுகை பின்தள்ளிப்போனது, இருந்த போதிலும் மதில் கட்டும் செயற்திட்டம் இன்னமும் சரிவராத நிலையில், தற்போது உள்ள மதிலானது கிழக்கு பக்கமாக மீளபுனரமைக்கும் போது 8 அடி மைதானத்தின் உள்ளே அமையவுள்ளது என்பதுடன் தற்போது நாட்டப்பட்டுள்ள மரங்கள் தற்போதைய சுவரில் இருந்து 5 அடி உள்ளே மைதானத்தில் நாட்டப்பட்டுள்ளன.

புதிய சுவர் கட்டப்பட்டதும் நாட்டப்பட்ட மரங்கள் மைதானத்திற்கு வெளியே சுவரில் இருந்து மூன்று அடி வெளியே வீதிப்பக்கமாக அமைந்து கொள்ளும். இந்த மரநடுகையின் போது காரைநகர் இந்துக்கல்லூரி அதிபர், உபஅதிபர், ஆசிரியர்கள், மாணவர்களுடன் காரைநகர் பிரதேச செயலர் திரு.ஜெகூ மரியதாசன், து?42 கிராமசேவகர் திரு.இ.இராசதுரை, கலாசார உத்தியோகத்தர், மற்றும் காரைநகர் அபிவிருத்தி சபை தலைவர் திரு.இ.சிவசுப்பிரமணியம், காரைநகர் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க செயலாளர் திரு.சு.அகிலன், அம்பாள் முன்பள்ளி நிர்வாக தலைவர் திரு.நா.பாலகிருஸ்ணன், சிவகௌரி முன்பள்ளி ஆசிரியை திருமதி.இந்திராணி வடிவழகையன், மற்றும் 1972, 1973, 1974 ஆகிய ஆண்டுகளில் பிறந்த முன்னாள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு இம்மரங்களை நாட்டிவைத்தனர்.

இதற்கான செலவான ரூபா ஒன்றரை இலட்சம் ரூபாய்களை 1973 மாணவர்கள் வழங்கியிருந்தார்கள். மேலும் தொடர்ந்து இம்மரங்களை பராமரிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேற்படி பழைய மாணவர்கள் சார்பில் பாடசாலையில் சிறு திருத்த வேலைகளிற்காக மேலும் 50,000 ரூபா செலவில் செயற்பாடுகள் நிறைவேற்றப்படவுள்ளன.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் மகோற்சவ தேர்த்திருவிழா 11.08.2026 இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இலங்கையில் ஆடி அமாவாசை 12.08.2026 புதன்கிழமை என்பதும் அன்றைய தினம் வியாவில் தீர்த்தோற்சவம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் மகோற்சவ தேர்த்திருவிழா 11.08.2026 இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இலங்கையில் ஆடி அமாவாசை 12.08.2026...

கனடா ரொறன்ரோ மாநகரின் ஸ்காபுரோ பகுதியில் சொந்தமாக கோயில் கொண்டு விளங்கும் கனடா கந்தசுவாமி ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா. 10.08.2026 திங்கள்கிழமை. நாளை செவ்வாய்கிழமை ஆடி அமாவாசை தினத்து தீர்த்தோற்சவமாகக் கொண்டு நடைபெறும் ரதோற்சவம்.

கனடா ரொறன்ரோ மாநகரின் ஸ்காபுரோ பகுதியில் சொந்தமாக கோயில் கொண்டு விளங்கும் கனடா கந்தசுவாமி ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா....

‘காரைநகர் சேவையாளர் கெளரவம் 2026’ – ‘எனது ஊர் காரைநகர்’ karainews.com நடாத்தும் ஐந்தாவது சேவையாளர் கெளரவம் தொடர்பான அறிவித்தல்.

‘காரைநகர் சேவையாளர் கெளரவம் 2026’ ‘எனது ஊர் காரைநகர்’ karainews.com நடாத்தும் ஐந்தாவது சேவையாளர் கெளரவம் தொடர்பான அறிவித்தல்....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605