காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் ஆலய மாதாந்த நித்திய பூசை முன்னேற்பாடு பற்றிய அறிவித்தல்.!
ஆதீனகர்த்தாக்கள் உதவியுடன் அமைக்கப்பட்ட நிர்வாக அமைப்பின் ஊடாக மாதாந்த நித்திய பூசைகளிற்கு அடியவர்கள் பலரும் தமது உபயங்களை பதிந்து கொண்டுள்ளனர். அனைவரது பதிவுகளும் திரு. பாலகிருஸ்ணன் சிவறைஞ்சன் அவர்களிடம் கிடைக்கும் வகையில் உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
இன்னும் சில நாட்களில் சித்திரை மாதம்(April) ஆரம்பமாகின்றது. அடுத்த மாதம் முதல் பதிவு செய்து கொண்டவர்களின் அடிப்படையில் மாதாந்த நித்திய பூசைகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே மாதாந்த பூசைகளை பதிவு செய்து கொண்டவர்கள் பூசை நடைபெறவேண்டியவர்களின் பெயர், நட்சத்திரம் என்பவற்றுடன் தங்களுடைய முழுமையான விலாசம் மற்றும் தொடர்புகளிற்காக தொலைபேசி இலக்கம் என்பவற்றையும் திரு.பா. சிவறைஞ்சன் அவர்களிற்கு கிடைக்கும் வகையில் உடனடியாக அனுப்பி வைக்கவும்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பா.சிவறைஞ்சன் – +94 (77) 469 0289 (WhatsApp ஊடாகவும் தொடர்பு கொள்ளலாம்).
இன்னும் சில நாட்களில் மாதாந்த பூசைகளை இதுவரை பதிவு செய்தவர்களது விபரம் கோயிலில் அமைந்துள்ள அறிவித்தல் பலகை ஊடாக தெரிவிக்கப்படும் என்பதனையும் ஆதீனகர்த்தாக்களின் சார்பில் திரு.பா.சிவறைஞ்சன் அவர்கள் தெரிவித்துக்கொள்கின்றார். நன்றி.








