காரைநகர் சேவையாளர் கெளரவமும் பாடசாலை மாணவர்களிற்கான பரிசளிப்பும்.

05.01.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ள ‘காரைநகர் சேவையாளர் கெளரவம்’ நிகழ்வில் காரைநகர் பாடசாலைகளில் கல்வி கற்று 2024 ம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் 3A க்கும் அதிகமான பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் ஊக்குவிப்பு பரிகள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் 2024ம் ஆண்டு பாடசாலைகளிற்கு இடையே மாகாணமட்ட, வலயமட்ட, கோட்ட மட்ட போட்டிகளில் பங்குபற்றி பரிசுகள் வென்ற அனைத்து பாடசாலை மாணவர்கள் 150 க்கு மேற்பட்டவர்களிற்கு ஊக்குவிப்பு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

காரை இந்து, யாழ்ற்ரன் கல்லூரி, வியாவில் சைவ வித்தியாசாலை, வலந்தலை வடக்கு, சுப்பிரமணியம் வித்தியாசாலை, மெய்கண்டான் வித்தியாசாலை, வேரப்பிட்டி ஶ்ரீ கனேசா வித்தியாசாலை, ஊரி அ.மி.த.க பாடசாலை, ஆயிலி சிவஞானோதயா வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளில் இருந்து பரிசு பெற்ற மாணவர்களது பெயர் விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அனைத்து மாணவர்களையும் விழாவில் கலந்து கொண்டு ‘எனது ஊர் காரைநகர்’ வழங்கும் ஊக்குவிப்பு பரிசுகளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன் இவ்விபரத்தினை சகமாணவர்களிற்கும் அறியப்படுத்தி தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் கேட்டுக்கொள்கிறேன்.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

அனைவரும் வருக…! இன்றைய காரைநகரின் இன்பம் பெறுக…!

காரைநகர் சேவையாளர் கெளரவமும் பாடசாலை மாணவர்களிற்கான பரிசளிப்பும்..05-Jan-2025

Leave a Reply