காரைநகர் நடுத்தெரு வாழ் மக்களின் உபயமாக நடைபெற்றுவரும் இத்திருவிழாவினை சடையாளியை சேர்ந்த திரு.வேலுப்பிள்ளை சிவகுருநாதன் அவர்கள் முன்னின்று செயற்படுத்தி வருகின்றார்.





கடந்த பல ஆண்டுகளாக திரு.வே.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றுவரும் நடுத்தெரு வாழ் மக்களின் உபயத்திற்காக வெளிநாடுகளிலிருந்தும் உள்ளூரிலும் நிதி சேகரிக்கப்பட்டு நடைபெற்று வந்துள்ளது.
கடந்த காலங்களில் ‘www.karainews.com இணையத்தளத்தில் அதற்கான அறிவித்தல் வழங்கப்பட்டு இத்திருவிழாவிற்காக நிதி உதவி வழங்கியவர்கள் பெயரிலேயே நிதி வழங்கப்பட்டது. இருந்த போதிலும் அதற்கான ரசீதோ அன்றி வரவு செலவு அறிக்கையோ வெளிவராத நிலையில் கடந்த வருடம் அறிவித்தல் வெளியிடப்படவில்லை.
2019, 2020 ம் ஆண்டுக்கான முதலாம் திருவிழாவிற்கான வரவு செலவு அறிக்கை திரு. வே.முருகமூர்த்தி அவர்களின் துணையுடன் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதனையும் பார்வையிட்டு எதிர்வரும் 19.03.2021 அன்று நடைபெறவுள்ள பங்குனி மகோற்சவ கொடியேற்ற திருவிழாவிற்கான தங்களது பங்களிப்பினை நேரடியாகவோ அன்றி என்னை தொடர்பு கொண்டோ வழங்கி உங்கள் பெயரிலேயே ரசீதினையும் பெற்றுக்கொள்ள முடியும்.





மேற்படி திருவிழாவிற்காக 17.03.2021 அன்று கனடாவில் இருந்து நிதி அனுப்பி வைக்கப்படும்.



