காரைநகர் வியாவில் சைவ வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காரைநகர் கோட்ட கல்விப்பணிப்பாளர் திரு.ம.மகேந்திரன் பாடசாலை அதிபர் திரு.க. துஷ்யந்தன் அவர்களுக்கு புகழாரம் சூட்டினார். ” வியாவில் சைவ வித்தியாலயம் குறுகிய காலத்தில் பல மாகாண, மாவட்ட சாதனைகளை புரிந்துள்ளது, பெற்றோர்களின் வரவேற்பை பெற்றுள்ளதுடன் அர்பணிப்புடன் தனது பணியினை மேற்கொள்வதாகவும், முன்னணி பாடசாலைகளிற்கு இணையாக வியாவில் சைவ வித்தியாலயம் வெகுவிரைவில் முன்னேற்றம் பெறும்” எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.













