இரண்டு தலைமுறை நண்பன் சிவா(சிவபாதசுந்தரம்) தனது புனித யாத்திரை முடித்து, ஆனி உத்தரம் சிதம்பரம், திருச்செந்தூர் கும்பாபிஷேகம், திருப்பதி தரிசனம், நயினை நாகபூசணி அம்மன் தேர் திருவிழா முடிந்து 12.07.2025 இன்று தனது பிறந்த நாளினை யாழ் U.S Hotel இல் வெகு விமர்சையாக 1973 நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
(அதென்ன இரண்டு தலைமுறை நண்பன்… என யோசித்தீர்களா..! எங்கள் அப்பாக்கள் இருவரும் நண்பர்கள், இப்போது நாங்களும் நண்பர்கள்..இரண்டு தலைமுறை..)
காரை இந்துவில் படிக்கிற காலத்தில் இருவரும் ஒரே வகுப்பாக இருந்தாலும் வேறு வேறு பிரிவுகள். ஆனால் சில காலத்தின் பின் களபூமி கோஷ்டி அதிகமாக இருந்த அந்த பிரிவில் இருந்து பிரித்து வரப்பட்டு எங்கள் பிரிவிலே விஜயா ரீச்சர் சேர்த்து விட்டார். 30 வருடங்களை கடந்து விஜயா ரீச்சர் ஏன் செய்தார் என்று இன்னுமொரு காரணம் இப்பதான் புலனாகிறது.










