காரைநகர் அம்பாள் முள்பள்ளி செயற்பாடுகளிற்காக நிரந்தர வைப்பு நிதியம் ஆரம்பித்து வைப்பதற்காக 19.03.2026 நன்கொடைகள் வளங்கப்பட்டது.
பிள்ளையார் சனசமூக நிலையத்தினரின் நேரடி செயற்பாடுகளினால் நிர்வகிக்கப்படும் அம்பாள் முன்பள்ளியின் நிரந்தர நீடித்த செயற்பாடுகளிற்காக நிரந்தர வைப்பு நிதியம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் 01.03.2026 அன்று நடைபெற்ற பிள்ளையார் சனசமூக நிலையத்தின் பொதுக்கூட்டத்தின் போது நிறைவேற்றப்பட்டது.
அதனடிப்படையில் 19.03.2026 இன்று அதற்கான வைப்பு பணமாக இன்றைய தினம் நிதி வளங்கப்பட்டுள்ளது.
திரு.தீசன் திரவியநாதன் ரூபா ஒரு இலட்சம் வழங்கி ஆரம்பித்து வைத்தார். அதனைத்தொடர்ந்து திரு. வேலுப்பிள்ளை நடராசா சார்பாக அவருடைய மகன் கிருபா £250(ஒரு இலட்சம் ரூபா) வழங்கினார்.
தொடர்ந்து பலரும் தலா ஒரு இலட்சம் நிரந்தர வைப்புக்கு வழங்க தமது பெயர்களை பதிவு செய்தனர்.
தாங்களும் தங்களது பெயரால் அம்பாள் முன்பள்ளியின் நிரந்த செயற்பாடுகளின்காக நிரந்தர வைப்பிற்கு நிதி வளங்க பிள்ளையார் சனசமூக நிலைய நிர்வாகத்தினரை தொடர்பு கொள்ளவும்.
காரைநகர் மாணவர்களின் ஆரம்ப கல்வி வளர்ச்சிக்காக நிரந்தரமாக நீண்ட கால நோக்கில் உதவுவதற்காக 100 நபர்கள் தலா ஒரு இலட்சம் ஒரு மாத காலத்தினுள் வழங்கி சாத்தியமாக்குவோம். நன்றி:
பிள்ளையார் சனசமூக நிலையம் தொடர்புகளிற்கு:
தலைவர்: நாகலிங்கம் பாலகிருஸ்ணன் – +94 74 071 0123
செயலாளர்: விஸ்வலிங்கம் வைகுந்தவாசன் – +94 77 249 7278
பொருளாளர்: இராசையா சண்முகராசா – +94 77 6679343
WhatsApp ஊடாகவும் தொடர்பு கொண்டு தங்களது பங்களிப்பாக ஒரு இலட்சம் வழங்க அழைத்து பதிவு செய்யுங்கள். நன்றி.
காரைநகர் அம்பாள் முன்பள்ளி நிரந்தர கட்டிடத்தில் 19.03.2026 இன்று முதல் வகுப்புகள் ஆரம்பம்.






