நாள் : Monday, September 7, 2026
--:--:--
👁️
Awareness

ஊர்ப்பணியாக மக்களிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட காரைநகர் சடையாளி கேணி இறைத்து சுத்தப்படுத்தும் பணி ‘எனது ஊர் காரைநகர்’ ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

ஊர்ப்பணியாக மக்களிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட காரைநகர் சடையாளி கேணி இறைத்து சுத்தப்படுத்தும் பணி ‘எனது ஊர் காரைநகர்’ ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

காரைநகர் அபிவிருத்தி சபையினர், பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம சேவகர்கள் பிரதேச மக்கள், வெளிநாடுகள் வாழ் காரைநகர் மக்கள் இந்த முன்னேற்பாடுகளை உன்னிப்புடன் அவதானித்து வந்தனர்.

கேணி இறைப்பது, கிணறு இறைப்பது, வீதி சுத்தம் செய்வது போன்ற பணிகள் சிறியனவையாக இருந்தாலும், சிறியளவு தொகையுடன் நிறைவேற்ற தனியொருவரால் தனிப்பட்டளவில் நிறைவேற்றவும் முடிந்தாலும் அதற்கு ஏன் இவ்வளவு விளம்பரம்..! அதற்கு ஏன் இந்தளவு பகீரதப்பிரயத்தனம் என்றெல்லாம் சிந்திப்பவராக இருந்தால் பொதுப்பணியில் ஈடுபடுவதற்கு தகுதியற்றவர்கள். காரணம் ஒரு சிறியளவிலான பொதுப்பணியாக இருந்தாலும் அதுவே பலவற்றிற்கும் முன்னுதாரணமாக விளங்கி வருகிறது. இது போன்ற மேலும் பல பணிகளை ஆரம்பித்து நிறைவு செய்ய ஊக்கமாக பலருக்கும் உத்வேகத்தை சிந்தனையை வளங்குகிறது.

இந்த பணி மூலம் ‘காரைநகர் அபிவிருத்தி சபையினர்’ வருடந்தோறும் காரைநகரில் உள்ள பொதுக்கேணிகள், பொதுக்கிணறுகளை இறைத்து சுத்தம் செய்யவும் அதன் பயன்பாடுகளை உறுதிப்படுத்திக்கொள்ளவும் வருடந்தோறும் 10 இலட்சம் ரூபாய்களை ஒதுக்குவதற்கு நிர்வாக சபையில் வேண்டுகோளை முன்வைத்து தீர்மானமாக நிறைவேற்ற முயற்சி எடுக்கவும் உள்ளதாக அறியத்தந்திருக்கின்றனர். தற்போதைய நிர்வாக சபை உறுப்பினர்களில் ஒருவரான திரு.கலைக்குமரன் அவர்கள் கிழுவனைக்கேணியினை தூர்வார முயற்சிகளை மேற்கொள்வதாகவும் அறியத்தந்துள்ளார்.

‘சுண்டல்காய் கால் பணம், சுமை கூலி முக்கால் பணம்’ என்கிற முதுமொழி பொதுப்பணிகளில் சாத்தியமாகாது என்பதுடன் நிதியை மட்டும் கணக்கிட்டால் பொருத்தமற்றதாகும், ஆனாலும் இது போன்ற பொதுப்பணிகளால் ஊர்ப்பற்றும், ஊர் மீதுள்ள அக்கறையும், காரை மக்களின் மேல் உள்ள அக்கறையும் விசுவாசமும் விலைமதிப்பற்ற வகையில் வெளிக்கொண்டு வரப்படும் என்பதில் ஐயம் இல்லை. விதை சிறியனவாக இருந்தாலும் விருட்சம் பலருக்கும் பயனளிக்கும்.

இப்பணியில் நிதியுதவி வளங்கியவர்கள், மற்றும் எல்லாவகையிலும் உதவியாகவும் ஆதரவாக செயற்பட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.

(91,000 – 68,915 = 22,085), காரைநகர் அபிவிருத்தி சபையினரிடம் மிகுதி பணம் 22,085 ‘எனது ஊர் காரைநகர்’ சார்பில் கையளிக்கப்படும். வரவும் செலவும் இதோ.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மிக கவனமாக செயற்படுங்கள்.

2026ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரீட்சை முடிவுகள் 02.09.2026 மாலை நான்கு மணிளவில் வெளியாகியுள்ளது. காரைநகர் பாடசாலை அதிபர்கள்,...

31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக அனுமதி பெற்ற தேவையுடைய மாணவிக்கு மடிக்கணணி வளங்கியுள்ளது.

காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக தொடரட்டும் கல்விக்கான பணிகள். 31.08.2026 இன்று திங்கள்கிழமை காரைநகர் அபிவிருத்தி சபை பல்கலைக்கழக...

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஆறு பல்கலைக்கழக மாணவர்கள் , கல்விக்காக இன்னொருவரின் உதவிகளை வேண்டி நிற்கிறார்கள்.

காரைநகர் அபிவிருத்தி சபை செய்தி. காரைநகரில் இருந்து இந்த ஆண்டு 20 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தார்கள். அவர்களில் ஆறு...

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026 இந்த ஆண்டு(2026) ஜனவரி 21ம் திகதி காரைநகர் பெரியடைப்பில்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605