கனடா வாழ் காரைநகர் மக்கள் அறிந்து கொள்ளப்படவேண்டியது யாதெனில்..!
கனடா வாழ் காரைநகர் மக்கள் சார்பாக கனடா காரை கலாசார மன்றமோ அல்லது வேறு எந்தவிதமான காரை மக்கள் சார்பாக கனடாவில் இயங்கி வரும் எந்த அமைப்புக்களோ ‘ஒன்றுகூடல்’ நிகழ்வினை நடாத்தவில்லை. தனிப்பட்ட நபர்கள் நடாத்தும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதும் அதனை தவிர்ப்பதும் உங்கள் சிந்தனைகளிற்கு உட்பட்டது.
தனிப்பட்ட நபர்கள் நடாத்தும் ஒன்றுகூடல் அல்லது நிகழ்வுகள் மூலம் தனிப்பட்ட நபர்கள் தமது இலாபநோக்கத்தோடு மட்டுமே செயற்படுகிறார்கள் என்பதும் கனடா வாழ் காரைநகர் மக்களை இந்த நிகழ்வுகள் பிரதிபலிக்கப்போவதில்லை என்பதனையும் கனடா வாழ் காரைநகர் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதனையும் தாழ்மையுடன் ‘எனது ஊர் காரைநகர்’ karainews.com ஊடாக தெரிவித்துக்கொள்கிறேன்.
கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாகத்தை செயலிளக்க வைக்கும் வகையில் 28.04.2024 கடந்த வருடம் நிர்வாகத்தை கைப்பற்றியவர்கள், தமது திட்டத்தின் அடிப்படையில் கனடா காரை கலாசார மன்றத்தை செயலிளக்க வைத்ததுடன், அன்றைய தினம் செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாக சபையில் தெரிவு செய்யப்பட்டவர்களே கனடா காரை கலாசார மன்றத்தை தொடர்ந்தும் செயலிளக்க வைக்கும் நோக்கில் கனடா வாழ் காரைநகர் மக்களிடத்தில் தமது சுயலாபம் கருதி போலியான அடையாளங்களுடன் கனடா வாழ் காரைநகர் மக்களிடத்தில் பிரிவினையை உண்டுபண்ணும் வகையில் செயற்பட்டு வருகிறார்கள் என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கனடா காரை கலாசார மன்றம் வெகுவிரைவில் மீண்டும் வழமையான சேவைகளிலும் கனடா வாழ் காரை மக்களின் ஒற்றுமையை முன்னிறுத்தியும் இயங்கும். நம்புங்கள். ஒற்றுமையே பலம். தனிமரம் ஒருபோதும் தோப்பாகாது.
ஒருநாள் கூத்துக்காக ஒற்றுமையை சீர்குலைக்க முற்படுபவர்கள் ஒருபோதும் நல்லெண்ணம் உடையவர்களாக சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது.
உண்மையை சொல்வோம். சிந்தனைக்கு நேரம் கொடுங்கள். கனடவில் காரைநகர் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்காதீர்கள். கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாகம் தொடர்பாக தற்போதைய சூழ்நிலைகளை உண்மையோடும் நேர்மையோடும் அறிந்து கொள்ள ‘எனது ஊர் காரைநகர்’ இனை தொடர்பு கொள்ளுங்கள். தற்போதைய நிர்வாகம் தொடர்பான விளக்கம் வளங்கப்படும். நன்றி.






